அடேங்கப்பா..!! வேற லெவலுக்கு போகும் சென்னை.. வணிக வளாகம் வழியாக மெட்ரோ ரயில்..!
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் வணிக வளாகம் வழியாக செல்லும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பயண நெரிசலை குறைக்கவும், பொது போக்குவரத்தை மேம்படுத்தவும் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டமாகும். இது இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: கம்ப்ளைண்ட் கொடுக்க வந்த பெண்ணுக்கு காம வலை.. சில்மிஷ இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!
மாதவரம் முதல் சிப்காட் (44.6 கி.மீ, 30 நிலையங்கள்): இது வட சென்னையை இணைக்கிறது, முக்கியமாக தொழில்நுட்ப மற்றும் தொழிற்பேட்டை பகுதிகளை இலக்காகக் கொண்டது.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி (26.1 கி.மீ, 28 நிலையங்கள்): இது மேற்கு சென்னையை இணைக்கிறது, புறநகர் பகுதிகளுக்கு இணைப்பை மேம்படுத்துகிறது.
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (45.8 கி.மீ, 48 நிலையங்கள்): இது தெற்கு சென்னையை இணைக்கிறது, ஐ.டி. தாழ்வாரம் மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளை உள்ளடக்கியது.
இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் வணிக வளாகம் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 9 மாடி வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது. புதிய ரயில் நிலையத்தின் வடிவமைப்பு திட்டத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தில் மெட்ரோ ரயில் நிலையம் 4-வது மாடியில் அமைந்து, 5 மற்றும் 6-வது மாடிகளில் ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6.85 லட்சம் சதுர அடியில் இந்த வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மாதவரம் முதல் சிப்காட், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி, மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மூன்று வழித்தடங்களில் இதுபோன்ற வணிக வளாகங்களுடன் கூடிய மெட்ரோ நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027-க்குள் முடிக்கப்பட உள்ளது, மதிப்பீட்டு செலவு ரூ.63,246 கோடி ஆகும்.
இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கட்டத்தில் பல்வேறு அலுவலகங்கள், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 3 நிலைகளில் சுரங்க வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறான அமைப்பு இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் தெருத்தெருவாக காரில் சுற்றிய ராமதாஸ்.. அமித்ஷாவுக்கே அல்வா..!