சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!
சென்னையில் நிர்வாகச் சீரமைப்பு நடவடிக்கையாக 11 காவல் ஆய்வாளர்களை அதிரடியாகப் பணியிடமாற்றம் செய்து மாநகரக் காவல் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்தவும், குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்துத் தீவிரமாகக் கண்காணிக்கவும் ஏதுவாக, மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் 11 காவல் ஆய்வாளர்களை (Inspectors of Police - Cate I) உடனடியாகப் பணியிடமாற்றம் செய்து சென்னை பெருநகரக் காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் அவர்கள் தற்பொழுது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநகரக் காவல் துறையின் நிர்வாகச் சீரமைப்பின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள இந்த அதிரடிப் பட்டியலில், சென்னை பெருநகரிலுள்ள பல்வேறு முக்கியக் காவல் நிலையங்களின் சட்ட ஒழுங்கு (L&O) மற்றும் குற்றப்பிரிவு (Crime) ஆய்வாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி மாற்றப்பட்டுள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:
மீனம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த கே. சுதாகர், அதே மீனம்பாக்கம் காவல் நிலையத்தின் சட்ட ஒழுங்கு (S3 Meenambakkam L&O) ஆய்வாளராக அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!
கோட்டூர்புரம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு பிரிவுக்கு (J4 Kotturpuram L&O) கே. மோகன்தாஸ் அவர்களும், ராயபுரம் சட்ட ஒழுங்கு பிரிவுக்கு (N1 Royapuram L&O) எஸ். அன்புக்கரசன் அவர்களும் புதிய ஆய்வாளர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர்.
எழும்பூர் குற்றப்பிரிவில் இருந்த வி. மணிகண்ட கணேஷ் தற்பொழுது வானகரம் சட்ட ஒழுங்கு (T5 Vanagaram L&O) பிரிவிற்கும், நுண்ணறிவுப் பிரிவில் (Intelligence Section) பணியாற்றி வந்த டி.கே. பாலசுப்பிரமணியன் அண்ணா நகர் சட்ட ஒழுங்கு (K4 Anna Nagar L&O) பிரிவிற்கும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், செம்பியம் குற்றப்பிரிவில் இருந்த ஜி. ராதாகிருஷ்ணன் ஓட்டேரி சட்ட ஒழுங்கு (P2 Otteri L&O) பிரிவிற்கும், மதுரவாயல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் (PEW Madhavaram) இருந்த எச். முகமது ஷபியுல்லா மாதவரம் சட்ட ஒழுங்கு (M1 Madhavaram L&O) பிரிவிற்கும், நுண்ணறிவுப் பிரிவில் இருந்த ஆர். விமல் துரைப்பாக்கம் சட்ட ஒழுங்கு (J9 Thuraipakkam L&O) பிரிவிற்கும் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, துரைப்பாக்கம் சட்ட ஒழுங்கு ஆய்வாளராக இருந்த எஸ். பிரபு தற்பொழுது எழும்பூர் குற்றப்பிரிவிற்கும் (F2 Egmore Crime), சி. மகேஷ் குமார் மீனம்பாக்கம் குற்றப்பிரிவிற்கும் (S3 Meenambakkam Crime) மாற்றப்பட்டுள்ளனர். கோட்டூர்புரம் சட்ட ஒழுங்கு ஆய்வாளராக இருந்த எஸ். பாஸ்கர் தற்பொழுது காத்திருப்போர் பட்டியலுக்கு (VR @ GCP) கொண்டு வரப்பட்டுள்ளார்.
பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த 11 காவல் ஆய்வாளர்களையும் எவ்விதத் தொய்வுமின்றி உடனடியாக விடுவித்து, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய காவல் நிலையங்களில் உடனடியாகப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகரத்தின் அனைத்து மண்டலக் கூடுதல் மற்றும் இணை ஆணையர்களுக்குக் காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் அவர்கள் தனது உத்தரவில் மிகவும் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தலைநகரின் சட்டம் ஒழுங்கு கட்டமைப்பை மேம்படுத்தக் காவல் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் தொடர் அதிரடி மாற்றங்கள், சென்னை ஏரியா ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மத்தியில் தற்பொழுது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை சோதனை!