×
 

நில மோசடி வழக்கு.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24ல் குற்றச்சாட்டு பதிவு!!

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த வழக்கில் ஜூலை 24 ஆம் தேதி அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்தார். இதுகுறித்து பார்த்திபன் என்பவர் 2011-ம் ஆண்டு புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது. அந்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்த பிரச்னை... ஜே.பி.நட்டாவுக்கு அமைச்சர் மா.சு கடிதம்!!

இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  மோசடி வழக்கை கடந்த முறை விசாரித்த எம்பி, எல்எல்ஏ கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் அவரின் மனைவி மீது மே23ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேங்கடவரதன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன் கூட்டியே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் ஜூலை 24-ல் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படும் என சென்னை சிறப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share