சென்னையில் 3,400 தெருக்களுக்கு பெயர் மாற்றம்... மாநகராட்சி அதிரடி முடிவு...!
சென்னையில் 3 ஆயிரத்து 400 தெருக்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, தனது சமூக நீதி அரசியலின் முன்னோடியாக இருந்தாலும், சாதி அடையாளங்கள் இன்னும் சமூகத்தின் நிழலாகத் திகழ்கின்றன. இத்தகைய சூழலில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சாதி சார்ந்த பெயர்களைத் தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் என்பவற்றிலிருந்து நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது வெறும் பெயர் மாற்றமல்ல. சமூகத்தில் சாதியின் பிணைப்புகளை அறுத்து, சமத்துவத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படி. ஏப்ரல் 29 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த இந்த உத்தரவு, தமிழகத்தின் சமூக மாற்றப் போராட்டத்தின் தொடர்ச்சி. இந்த சாதிப்பெயர் நீக்கும் நடைமுறை வரவேற்பு பெற்றாலும் பல சிக்கல்களை எதிர்கொள்ள தான் செய்கிறது.
இதனிடையே சாதிப் பெயர்களை நீக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நவம்பர் 11ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
தெருக்கள், சாலைகளுக்கு தலைவர்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் நீர்நிலைகளுக்கு பூக்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. சாலைகளுக்கு தலைவர்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் நீர்நிலைகளுக்கு செம்பருத்தி, முல்லை, செண்பகம் உள்ளிட்ட பெயர்களை வைக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இன்று IT நிறுவனங்கள் டார்கெட்..!! தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் அலறும் சென்னை..!!
இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் சாதிப் பெயர்களை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் 3,400 தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கிவிட்டு புதிய பெயர்களை சூட்ட மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு நவம்பர் 19ஆம் தேதிக்குள் புதிய பெயர் பலகை மாற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது
இதையும் படிங்க: வேகமெடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி.. ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம்..!!