×
 

#BREAKING விவசாயிகளுக்கு குட் நியூஸ் : நெல் கொள்முதல் விலை அதிரடி உயர்வு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

விவசாயிகள் நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் பெறுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சேலம் மாநகராட்சி பகுதிகளில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் மேம்பாடு, கழிவுநீர் கால்வாய்கள்,சிறு பாலங்கள் சீரமைக்கப்படும் என்றும், சேலம் செவ்வாய்பேட்டை தினசரி சந்தை ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்றும்,  தலைவாசல் வட்டத்தில் இலுப்பநத்தம் கிராமத்தில் உள்ள வேளாண் விற்பனை நிலையம் 10 கோடியில் சீரமைக்கப்படும் எனவும், சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

மேலும் தாரமங்கலம் நகராட்சியில் ரூ.18 கோடியிலும், எடப்பாடி நகராட்சியில் ரூ.9 கோடியிலும், ஆத்தூர் நகராட்சியில் ரூ.5 கோடியிலும் புதிய குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்படும் என அறிவித்த முதல்வர், மேட்டூர் மற்றும் நடசிங்கபுரத்தில் புதிய நகராட்சி அலுவலக கட்டடங்கள் கட்டப்படும் என்றும் அறிவித்தார். 

மேட்டூர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்,பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் பெறுவார்கள், அதற்கு ஏற்றார் போல் சாதாரண ரகத்திற்கு 137 ரூபாய், சன்ன ரகத்திற்கு 156 ரூபாய்  நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்.  சாதாரண ரகம் 2500 ரூபாய்க்கும், சன்ன ரகம் 2545 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். இதனால் 10 லட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள் என அறிவித்தார். 

இதையும் படிங்க: ஆன்மீகப் புரட்சி செய்த ஆளும் அரசு.. முதல்வரை பாராட்டி தள்ளிய செல்வப்பெருந்தகை..!

இதையும் படிங்க: 2026-ல் ஆளும் திமுக அரசுக்கு முடிவு கட்டப்படும்.. நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share