ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!
பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள்.
தமிழ்நாட்டில் இடைநிற்றலில் ஈடுபடும் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
விருதுநகரில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் கள ஆய்வில் ஈடுபட்டு வரும் ஆட்சியர் ஜெயசீலன், மாணவனுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் மாண்புமிகு அன்பில் மகேஷ், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!
ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள்.
இதையும் படிங்க: ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்
காலை உணவுத் திட்டம், #SmartClassrooms, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள்.‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்! என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!