×
 

தேசிய கொடியை தொட்டதும் முடிவுக்கு வந்த போர்.. இந்தியா- பாக். போர் நிறுத்தத்திற்கு ஸ்டாலின் வரவேற்பு!!

இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா மீது மீண்டும் கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது. இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதனிடையே இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இந்தியா வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போர் நிறுத்தப்பட்டது; ஆனால் இது கண்டிப்பா தொடரும்.. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி!!

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். முன்னதாக பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி இன்று சென்னையில் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்றி மாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து திட்டமிட்டபடி பேரணி தொடங்கியது. தேசியக் கொடியை ஏந்திய படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியை தொடங்கி வைத்து நடந்து சென்றார்.

இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வைகோ உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள், பல்வேறு சமுதாயத்தினர், மாணவ மாணவிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேரணி தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெற்றது. ஒருபுறம் இந்த பேரணி நடந்த வந்த நிலையில் மறுபுறம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த போர் நிறுத்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், போர் நிறுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அமைதி நிலைத்திருக்கட்டும். நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு மனமார்ந்த வணக்கங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. டிரம்ப் செய்த தரமான சம்பவம்; என்ன பேசி போரை நிறுத்தியிருப்பார்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share