×
 

#BIGBREAKING விடிந்ததுமே அதிரடி...!! - 717 டாஸ்மாக் கடைகளை மூட சி.எம். விஜய் உத்தரவு... எங்கெல்லாம் தெரியுமா?

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கோயில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகே அமைந்துள்ள 717  டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மதுவிலக்கு தொடர்பான முதல் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். குறிப்பாக, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கோயில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகே அமைந்துள்ள 717  டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளார். 

விஜய் தேர்தல் பிரசாரத்தின் போதே தவெக ஆட்சியில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என கூறியிருந்தார்.

முதலமைச்சராக பதவியேற்ற அன்று கூட, பெண்கள் பாதுகாப்பை மிகவும் கடுமையாக வைத்திருப்பேன். போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுக்குள் வைக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதனை இன்றிலிருந்தே எடுப்பேன் என்றும், சட்டம் ஒழுங்கில் அனைவருக்குமான பாதுகாப்பை நான் உறுதி செய்வேன் என்றும் பேசியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து போதைப் பொருள் ஒழிப்பு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஆகிய முக்கிய கோப்புகளில் தனது முதல் கையெழுத்தையும் போட்டார். இதனிடையே, நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆய்வுக் கூட்டம் ஒன்றினை நடத்தினார். அப்போது டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகல்கள் வெளியான நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியாகியுள்ளது. 

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளை 2 வாரத்திற்குள் மூட வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வாணிபக் கழகத்தால் தற்போது 4,7654 மதுபான சில்லறை விற்பனை கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகள் குறித்து கணக்கெடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, வழிபாட்டுத்தலங்களுக்கு அருகே 276 கடைகளையும், கல்வி நிறுவனங்களுக்கு அருகே 186 கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளார். மேலும் பேருந்து நிலையங்களில் இருந்து அரை கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 255 மதுக்கடைகளை மூடவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்நாடு பெண்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

 

 

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share