×
 

வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு..!

முதல்வர் விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு, மூன்றாவது முறையாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்தது.

கடந்த 27 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த விஜய்-சங்கீதா தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் திருமண பந்தத்தை சட்டப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வர கோரி சங்கீதா தரப்பில் கடந்த பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணை ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றபோது, மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சூழல் நிலவியது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: காலையிலேயே குட் நியூஸ்... மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு.. பெண்கள் செம்ம குஷி..!!

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இருப்பினும் முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் ஆஜராகாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா மாத்தி வைத்தார். முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகும் கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மனுதாரர், எதிர் மனுதாரரின் மெயில் ஐடிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் வக்காலத்து ஏன் தாக்கல் செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: 52வது பிறந்தநாளில் CM விஜய்க்கு உலக சாதனை பரிசு... 1000 மாணவர்கள் சிலம்பத்தில் அசத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share