மக்களே உஷார்...!! - இன்று திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய்... விடிந்ததுமே செய்யப்பட்ட அதிரடி மாற்றம்...!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திருச்சிக்கு வருகை தருவதையொட்டி, மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இன்று அதிகாலை 7.00 மணி முதலே அதிரடி போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
தவெக தலைவரும், முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய், நடந்து முடிந்த 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்க இன்று முதலமைச்சர் விஜய் திருச்சி செல்லவுள்ளார்.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர், அங்குள்ள புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். விமான நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லூரிக்கு செல்லும் வழியில் பொதுமக்களின் வரவேற்பை முதலமைச்சர் பெற்றுக் கொள்ள உள்ளார். அதன்பின்னர் கல்லூரி வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் சுமார் ஒரு மணி நேரம் முதலமைச்சர் பங்கேற்கவுள்ளார்.
இதையும் படிங்க: துக்கத்தில் நிற்கும் “நண்பர் அஜித்”... ஆறுதல் கூற ஓடோடி வந்த முதலமைச்சர் விஜய்... ஏ.கே. தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி...!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திருச்சிக்கு வருகை தருவதையொட்டி, மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இன்று அதிகாலை 7.00 மணி முதலே அதிரடி போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரதீப் குமார் விடுத்துள்ள இந்த அறிவிப்பின்படி, மதுரையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சியிலிருந்து மணப்பாறை, குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாகவும்; திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் மணப்பாறையிலிருந்து குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாகவும் திருப்பி விடப்பட உள்ளன.
இதேபோல், சென்னையிலிருந்து மதுரை, திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாகவும், புதுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் வழியாகவும் செல்ல வேண்டும். மேலும், மாநகரப் பேருந்துகளைப் பொறுத்தவரை நாளை காலை 10.00 மணி முதல், மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருவெறும்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் மரக்கடை வழியாக மெயின்கார்டுகேட் காந்தி சிலை அருகில் பயணிகளை இறக்கிவிட்டு மேல அரண்சாலை வழியாகச் செல்ல வேண்டும்; சத்திரம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்ல அனுமதி இல்லை.
முதலமைச்சரின் திருச்சி வருகை மாலை 4.15 மணிக்குத்தான் என்றாலும், பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்தைக் கருதி காலையிலேயே இந்த விரிவான மாற்று வழிப்பாதைகளை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் - பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!