×
 

#BREAKING பொள்ளாச்சி அருகே பயங்கரம்.. கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை..! 

பொள்ளாச்சி அருகே தனியார் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். விடுகப்பாளையம் பொண்ணு முத்துநகர் பகுதியில் வீட்டில் இருந்த மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் பொன்முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் என்பவருடைய மகள் அஸ்விதா 19 வயது. இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் இந்த மாணவியை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலிலையில், இன்று வீட்டில் தனியாக இருந்த அஸ்விதா திடீரென அலரும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டு, மயங்கிய நிலையில்  கிடந்துள்ளார். உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்விதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் சிஷ்டி சிங் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,  மாணவி தனியாக வீட்டில் இருந்தபோது வீட்டிற்கு சென்ற நபர் யார் என்பது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 

இதையும் படிங்க: 98.26% திரும்ப பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

இதையும் படிங்க: துணிகட்டி மறைக்க இது பாஜக மாடல் அல்ல; திராவிட மாடல்.. விமர்சனத்துக்கு மு.க ஸ்டாலின் பதிலடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share