விஜய் தலைமையில்தான் ஆட்சி! அது உறுதி! காங்கிரசில் அமைச்சர் பதவி யாருக்கு?!
விஜய் தலைமையில் ஆட்சி அமையும் பட்சத்தில், காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் ஆட்சியமைப்பை சுற்றிய பரபரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தால் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்ற தகவல் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சியமைக்க தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், ஐந்து எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்திருப்பது அரசியல் கணக்குகளை மாற்றியுள்ளது. காங்கிரஸ் ஆதரவு கிடைத்ததால் விஜய் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் அளித்துள்ள கருத்து முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அமைச்சரவைப் பட்டியல் குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிர பேச்சு தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: எப்போது தளபதி சர்கார்..? விஜய் - ஆளுநர் சந்திப்பு நிறைவு..! விளக்கம் கேட்கும் அர்லேகர்..!
காங்கிரஸ் தரப்பில், சட்டசபை குழுத் தலைவரும் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவுமான ராஜேஷ்குமார் அமைச்சராவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், மதுரை மேலூர் தொகுதி எம்எல்ஏவும் அகில இந்திய காங்கிரஸ் செயலருமான விஸ்வநாதன் பெயரும் முக்கியமாக பேசப்படுகிறது. மேலும், குளச்சல் தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையிலும், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, புதிய கூட்டணி அரசில் காங்கிரஸின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தற்போது அதிகமாக பேசப்படுகிறது.
விஜய் தலைமையிலான அரசு அமைந்தால் அமைச்சரவை அமைப்பு எப்படி இருக்கும், யாருக்கு முக்கிய துறைகள் வழங்கப்படும் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசியல் அடுத்த சில நாட்களில் மேலும் பரபரப்பாக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: விஜயை முதல்வர் ஆக்காம போக மாட்டோம்..! நேரு ஸ்டேடியம் வெளியே கண்ணீர் விட்டு அழும் தொண்டர்கள்..!!