×
 

விறுவிறு தேர்தல்..! ராஜ்யசபா பதவி யாருக்கு..? காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனுத் தாக்கல்..!!

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டின் அரசியல் களம் சமீபகாலமாக பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவான புதிய கூட்டணி அரசியல் சூழலில், அதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனால் காலியான இடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் ஜூன் 18 அன்று நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இது தமிழக அரசியலில் புதிய சமநிலையை உருவாக்கும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. சி.வி. சண்முகம், அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், முன்னாள் அமைச்சராகவும் அறியப்படுபவர். 2022ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டை உறுப்பினர் பதவியைத் தவிர்க்கும் விதிமுறைப்படி மே 7, 2026 அன்று மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை இடம் காலியானது. இந்திய தேர்தல் ஆணையம் இதைத் தொடர்ந்து ஜூன் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் ஜூன் 1ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பின்னணியில், தமிழக வெற்றி கழகம் தலைமையிலான ஆட்சியில் கூட்டணி பலம் பெறும் வகையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. தவெக சார்பில் பெரும்பான்மை இல்லாத சூழலில் காங்கிரஸின் ஐந்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு முக்கியமானது.

இதையும் படிங்க: I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

இந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக, தவெக தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், காலியாக உள்ள மாநிலங்களவை இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கினார். இது கூட்டணி அரசியலில் நம்பிக்கையை வலுப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை இந்த இடத்திற்கு பிரவீன் சக்கரவர்த்தியை வேட்பாளராக அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் வரும் எட்டாம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் காங்கிரஸ் தரப்பின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

இதையும் படிங்க: புதிய அரசியல் முகமூடியா..? அண்ணாமலை புதிய கட்சி..! சந்தேகத்தை கிளப்பிய MP மாணிக்கம் தாகூர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share