×
 

குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள கணவருடன் கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்வதற்காக தன் கணவருக்கு போலீஸ் பாதுகாவலர்கள் இல்லாமல் 21 சாதாரண விடுப்பு வழங்க கோரி மனு தாக்கல்.

மனுதாரர் கோரிக்கையை அனுமதித்தால் குழந்தை தரப்பில் எந்த தவறும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் ஒரு களங்கத்தைச் சுமக்கும். இந்த நிலையில் குழந்தையை வைப்பதற்கு மனுதாரருக்கோ, தண்டனை கைதிக்கோ உரிமையில்லை எனக்கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டனர். 

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த ஜலானி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், என் கணவர் முத்துமணி, மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். என் கணவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். இதற்காக கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்வதற்காக என் கணவருக்கு போலீஸ் பாதுகாவலர்கள் இல்லாமல் 21 நாள் சாதாரண பரோல் விடுமுறை வழங்கக்கோரி மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன். என் மனுவை சிறை கண்காணிப்பாளர் 11.9.2025ல் நிராகரித்து உத்தரவிட்டார். உத்தரவை ரத்து செய்து கணவருக்கு 21 நாள் பரோல் விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவில், விசாரணையில் மனுதாரர் தரப்பில்  நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் 226வது பிரிவின் கீழ் தனது அதிகாரவரம்பை பயன்படுத்தி தகுந்த உத்தரவு பிறப்பிக்கலாம் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

அரசு தரப்பில், தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு விதிகளின் கீழ் வழங்கப்படும் விடுப்பை ஒரு உரிமையாகக் கோர முடியாது. அது தண்டனை பெற்றவருக்கு வழங்கப்பட்ட ஒரு சிறப்புரிமை மட்டுமே. தண்டனை நிறுத்திவைப்பு விதிகளின் கீழ் உள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் தண்டனை பெற்றவருக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியாது எனக் கூறப்பட்டது.

இந்த வழக்கில் மனுதாரரும் தண்டனை பெற்றவரும் குழந்தை பிறப்புரிமையை வசதியாக புறக்கணிக்கின்றனர். குழந்தை இவ்வுலகில் நுழையும்போது 3 கொலை உள்ளிட்ட ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்து ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒரு கைதியின் குழந்தை என்ற களங்கத்துடன் வளரும். இத்தகைய சூழ்நிலையில் வாழ்நாள் முழுவதும் களங்கத்தைச் சுமக்கவிருக்கும் குழந்தையின் நலனைப் புறக்கணிக்க முடியாது. 

நீதிமன்றம் யதார்த்தங்களை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. எனவே, நீதிமன்றம் இந்த உலகில் பிறந்து வாழ்நாள் முழுவதும் களங்கத்தைச் சுமக்கவிருக்கும் குழந்தையின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. 

மனுதாரர் கோரிக்கையை அனுமதித்தால் குழந்தை தரப்பில் எந்த தவறும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் ஒரு களங்கத்தைச் சுமக்கும். இந்த நிலையில் குழந்தையை வைப்பதற்கு மனுதாரருக்கோ, தண்டனை கைதிக்கோ உரிமையில்லை. 

இதனால் சாதாரண விடுப்பு வழங்க மறுத்து சிறைத்துறை கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவில் தவறு ஏதும் இல்லை. அதில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
 

இதையும் படிங்க: அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share