×
 

ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

ஈரான் மீதான தாக்குதலுக்கு CPM கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடுத்துள்ள தாக்குதல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவித்து உள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தேசிய இறையாண்மை, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் அனைத்து சர்வதேச உடன்படிக்கைகளையும் அப்பட்டமாக மீறும் செயல் என்றும் கூறப்பட்டு உள்ளது.

ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளைப் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தத் தாக்குதல்களை நடத்தி இருப்பதாகவும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது, இந்தத் தாக்குதல்களின் மூலமும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கைகளின் மூலமும் தெளிவாகிறது என்றும் தெரிவித்து உள்ளது. 

அமெரிக்கா ஒரு போர்க்குணமிக்க ரவுடியாகச் செயல்பட்டு, தன்னிச்சையாக இறையாண்மை கொண்ட நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது., வெனிசுலா மீது சமீபத்தில் நடத்திய தாக்குதலையும், கியூபாவிற்கு விடுத்துள்ள அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து இப்போது ஈரான் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்... இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!!

 பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் முடிவடைந்த உடனே, ஈரான் மீதான இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்றும் தனது நட்பு நாடான ஈரானின் மீதான இந்தத் தாக்குதல்களை இந்திய அரசு தெளிவாகக் கண்டிக்க வேண்டும் என்றும் மோதல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! சென்னையில் 28.30 லட்சம் வாக்காளர்கள்..!! முழு விவரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share