×
 

“சாபத்தை வாங்காதீங்க...” - தவெக ஸ்டைலில் அமைச்சர் கீர்த்தனாவை விளாசிய பெண் பட்டாசு தொழிலாளி... காரணம் என்ன?

விதிமீறல் காரணமாக பட்டாசு தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலை இழந்த பெண் தொழிலாளி அமைச்சர் கீர்த்தனாவை சரமாரியாக சாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கண்ணில் படாமல் தீவிரவாதி போல ஒளிந்துள்ள அமைச்சர் கீர்த்தனா- கொந்தளிப்பி லிருக்கும் எங்களின் கண்ணீருக்கு விரைவில் பதில் கூறுங்கள்!-  வேலையிழந்த பட்டாசுத் தொழிற்சாலை பெண் தொழிலாளியின்  ஆடியோவுடன் கூடிய  வீடியோ க்காட்சி( ரீல்ஸ்) இணையதளத்தில் வைரல்...


 விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற பட்டாசு த் தொழிற்சாலை விபத்தைத் தடுக்கும் விதமாக அரசுத் துறைகளின்  அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது பாதுகாப்பு விதிமுறைமீறல் கண்டறியப்பட்ட ஏராளமான பட்டாசுத் தொழிற்சாலைகளின்  உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள து. இதன் காரணமாக சுமார் 10- ஆயிரம் தொழிலாளர்கள் வேலையியிழந்து, வருமானமின்றி தவித்து வருகின்றனர்.  வழக்கமாக முன்பு நடந்த ஆய்வின் போதெல்லாம் விதிமீறலை சுட்டிக்காட்டி மூடப்படும் பட்டாசு த் தொழிற்சாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்தவுடன்  30- நாட்களில் மீண்டும் தொழிற்சாலையை திறந்து செயல்பட அனுமதி வழங்கப் பட்டு வந்த நிலையில், தற்போது மாதக்கணக்கில் அனுமதி வழங்காமல் பட்டாசுத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஆண்-பெண் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை யிழந்து அன்றாடம்  கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 


 ஆய்வினால் மூடப்பட்டுள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வேலையில்லாமல் தவித்து வரும்  சிவகாசியைச் சேர்ந்த ஆண்- பெண் தொழிலாளர்கள் பலரும் தமிழக அரசுக்கு தங்களது பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில்  ஆதங்கத்தோடு பேசி, தமிழக வெற்றிக் கழகத்தைப் பின்பற்றி ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: 'முதல்வர் விஜயின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை'! காவிரி நீர்வரத்து அதிகரித்த நிலையில் அமைச்சர் கீர்த்தனா உருக்கம்!

 அதனடிப்படையில் பட்டாசுப் பெண் தொழிலாளி ஒருவர் சிவகாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழகத் தொழில் துறை அமைச்சருமான கீர்த்தனாவுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள ரீல்ஸ்சில் கூறியிருப்பதாவது:   கண்ணீருடன், பட்டினியாகக் கிடக்கும் பட்டாசுத் தொழிலாளிகளான எங்களுக்கு பதில் சொல்லுங்கள். எங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் எனக்கு வாக்களியுங்கள் என்றீர்கள்.

தற்போது எங்கள் கண்ணில் கூட படாமல் தீவிரவாதி போல ஒளிந்துள்ளீர்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவோம் என்ற நீங்கள் தற்போது 4- மாதங்களாக எங்கள் கண்ணில் தெரியவில்லை. உங்கள் வயிற்று பசி போலத்தான் எங்களின் வயிற்று பசியும். நல்லாட்சி வர வேண்டுமென மற்ற அரசியல் கட்சிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு சித்திரவதையை தான் கொடுக்கின்றீர்கள் எங்களின் கண்ணீர் மூலமாக சாபத்தை வாங்காதீர்கள்.

நல்ல முறையில் மீண்டும் ஆட்சிக்கு வந்து சிவகாசியில் காலடி எடுத்து வைக்க வேண்டுமென்றால் பட்டாசு தொழில் மூலமாக வேலை வாய்ப்பை தர வேண்டும். மக்கள் சந்தோஷமாக இருந்தால் தான் உங்களை வரவேற்போம். பட்டாசு தொழிலாளர்களின் கண்ணீருக்கு விரைவில் பதில் கூறி நல்லதொரு தீர்வு காணுங்கள். என  வேண்டுகோள் விடுத்துள்ள ஆடியோவுடன் கூடிய ரீல்ஸ்   வீடியோ க்காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி அனைத்து தரப்பினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

இதையும் படிங்க: வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share