×
 

அதிமுகவில் தனிமரமான சி.வி.சண்முகம்... சிவன் கோயிலில் வைத்து எடுத்த அதிரடி முடிவு...!

அதிமுகவில் இரு அணிகளாக இருந்த சிவி சண்முகம் இதுவரை எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காத நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவது தான் தனது கடமை என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் என அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து, கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டி, அவர்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களின் எம்எல்ஏ பதவிகளையும் ரத்து செய்ய கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த சுகுமார், மோகன், நடராஜன், திலீப்பன் மற்றும் ஹரிபாஸ்கர் ஆகிய ஐந்து எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், நான்கு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததை தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி அணியின் பலம் 15 ஆக குறைந்தது. இதையடுத்து, எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களான தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி உள்ளிட்ட 14 பேர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினர். ஆனால், சி.வி. சண்முகம் மட்டும் மன்னிப்பு கடிதம் அளிக்கவில்லை.

இதையும் படிங்க: மனுக்கள் முதல் முடிவுகள் வரை CVS தான்... அதிமுகவில் பிளவு இல்லை என S.P. வேலுமணி உறுதி..!

அதிமுகவில் சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி, ஒரு தரப்பாகவும், எடப்பாடி பழனிச்சாமி ஒரு தரப்பு என இரு அணிகளாக செயல்பட்டு வந்த நிலையில் எஸ் பி வேலுமணி தரப்பு எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டனர். எடப்பாடி பழனிச்சாமியை இதுவரை சிவி சண்முகமும், விஜய பாஸ்கர் ஆகிய இருவர் மட்டும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காமல் இருந்து வருகின்றனர்.

சிவி சண்முகம் சென்னையிலிருந்து திண்டிவனம் இல்லத்திற்கு வந்த அவர் திண்டிவனத்தில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பங்கு கொண்டார். பிரதோஷ வழிபாட்டில் பங்கு கொள்வதற்கு முன்பாக பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தனக்கு வாக்களித்த மயிலம் தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்துவது தான் முதல் கடமை அந்த பணியை செய்ய உள்ளதாக தெரிவித்தார். நாளை முதல் 31 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிவி சண்முகம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறார். அதன் பின் திங்கள் கிழமை சென்னை செல்லும் அவர் தனது முடிவை அறிவிக்க உள்ளதாக தனது ஆதரவு அதிமுக நிர்வாகிகளிடம் சிவி சண்முகம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

இதையும் படிங்க: ADMK படுதோல்வி… EPS மீது CV சண்முகம் நேரடி குற்றச்சாட்டு.! வெடிக்கும் அதிமுக உள்கலகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share