×
 

வேற வழி தெரியல ஆத்தா... சிலிண்டர் தட்டுப்பாடு... அவசர அவசரமாக மண் அடுப்பை கட்டும் டீக்கடை காரர்கள்.!!

சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதால் டீக்கடைகளில் மண் அடுப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள LPG சிலிண்டர் தட்டுப்பாடு பல தரப்பினரையும் கடுமையாக பாதித்து வருகிறது. குறிப்பாக, சாலையோர டீக்கடைக்காரர்கள், சிறு உணவக உரிமையாளர்கள் போன்ற சிறு வணிகர்கள் இதன் தாக்கத்தை நேரடியாக உணர்ந்து வருகின்றனர். மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட போர் நிலைமைகள், குறிப்பாக ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான பதற்றம் காரணமாக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வணிக ரீதியான சிலிண்டர்கள் கிடைப்பது கடுமையாக குறைந்துள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால், ஹோட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள் ஆகியவை பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளன. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட இடங்களில் டீக்கடைக்காரர்கள் தங்கள் அடுப்பை எரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஒரு சிலிண்டர் தீர்ந்த பிறகு புதியது கிடைக்காமல் போக, தினசரி வருமானம் பாதியாகவோ அல்லது முற்றிலும் இழந்தோ நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு டீக்கடைக்கு ஒன்றோ இரண்டோ சிலிண்டர்கள் மட்டுமே இருக்கும். அது தீர்ந்தால் கடையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் கடைகளை தற்காலிகமாக மூடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

இதையும் படிங்க: கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... மாற்று வழி தேடும் மக்கள்... விறகுகள் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு..!!

இத்தகைய சூழலில், பல டீக்கடைக்காரர்கள் அவசரமாக மண் அடுப்பு கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். பாரம்பரியமாக கிராமப்புறங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த மண் அடுப்புகளை நகர்ப்புற சாலை ஓரங்களில் மீண்டும் கொண்டு வரும் முயற்சி இது. விறகு, கரி அல்லது உள்ளூர் எரிபொருள்களை பயன்படுத்தி டீ தயாரிக்க இதை ஏற்பாடு செய்கின்றனர். கடைகளில் விற்பனை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக விறகு அடுப்பை கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: பிளாக்கில் சிலிண்டர் விற்பனை... அநியாய கொள்ளை..!! புலம்பித் தவிக்கும் வியாபாரிகள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share