×
 

முதல்வராக ஆசைப்பட்டால் இதுதான் கதியா?.. விஜயை விட்டில் பூச்சி என விமர்சித்த லியோனி..!

மலை ஜாதி பெண்ணை கலப்பு திருமணம் செய்து திராவிட மாடல் ஆட்சியை நிலை நாட்டிய தமிழ் கடவுள் முருகன் திமுக உறுப்பினர் என திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு தமக்கே உரிய பாணியில் இடையிடையே பாடல் பாடி நகைச்சுவையாக பேசினார். தமிழ்நாட்டில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயம் நடை அடைக்கும் போது கிறிஸ்தவரான ஜேசுதாஸ் பாடிய பாடலை பாடிய பின்னரே நடை அடைப்பார்கள் எனவும், கிறிஸ்தவர் பாடிய பாடலை கேட்டு தான் ஐயப்பன் உறங்குகிறார் என்றால் அவருக்கு இந்து வேறல்ல, கிறிஸ்தவர் வேறல்ல, இஸ்லாமியர் வேறல்ல என்பது தெரிவதாகவும், யார் பாட்டு பாடினாலும் உறங்குவேன் என கடவுளுக்கு தெரிந்திருப்பதாக கூறினார்.

மதத்தை வைத்து நம்மை பிரிப்பதற்கு முருகனை வைத்து மாநாடு நடத்தி உள்ளதாகவும், இதனால் முருகனே கண்ணீர் விட்டு அழுததாக தெரிவித்தார். முருகன் தங்கமான மனிதர் எனவும், முருகன் வள்ளியை காதலிப்பார் எனவும், திருத்தணியில் வள்ளியை திருமணம் செய்தார் எனவும், வள்ளி மலை ஜாதி எனவும், மலை ஜாதி பெண்ணை கலப்பு திருமணம் செய்து திராவிட மாடல் ஆட்சியை நிலை நாட்டிய தமிழ் கடவுள் முருகன் எனவும், முருகன் திமுகவின் உறுப்பினர் எனவும், அதனால் தான் முருகன் கலப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறினார். முருகன் திராவிட சிந்தனையாளர் என்பதால் தான் அவருக்கு ரோஷம் வந்ததாகவும், தாய், தந்தையை சுற்றி விநாயகர் மாம்பழத்தை வாங்கி விட்டார் என்பதால் கோபமடைந்து, தனக்கு கிடைக்க வேண்டியது வரவில்லை என்பதால் கோபித்து கொண்டு பழனிக்கு சென்ற முருகன் தான் மாநில சுயாட்சி சிந்தனையை கொடுத்தவர் என்றார்.

இதையும் படிங்க: பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என தற்போது முதலமைச்சர் கூறி வருவது, முருகன் கற்று கொடுத்த பாணியை கடைபிடித்து மாநில சுயாட்சி என்ற அண்ணாவின் கொள்கையை இன்று வரை காப்பாற்றி வருவதாக கூறினார். கணவன் எவ்வளவு பேசினாலும், அதற்கு பதில் பேசாமல் இருக்கும் பயந்த மனைவியை போல, அமித்ஷா கூட்டணி ஆட்சி நடைபெறும் எனவும், எங்களது தலைமையில் ஆட்சி நடைபெறும் என பேசிய போது அமைதியாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி எனவும், அதனை எதிர்த்து பேசவில்லை என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேசாதது போல இல்லாமல் மத்திய அரசை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை காப்பாற்றி வருவதாக தெரிவித்தார். மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஒத்து ஊதும் எடப்பாடியை 2026 இல் மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள் என தெரிவித்தார். புதியதாக கட்சி ஆரம்பித்த நடிகர் தற்போது வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனவும், தற்போது வரையில் எந்த போராட்டத்தையும் சந்திக்கவில்லை என்றும் நேராக முதலமைச்சராக வேண்டும் என நினைப்பவர் நெருப்போடு போர் தொடுக்க வந்த விட்டில் பூச்சாக சிதறி விடுவார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share