"எப்பா என்னைய மாட்டிவிட்டு கட்சியிலிருந்து நீக்க வெச்சிடாதீங்க.." விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்..!!
என் டி கே கூட்டணியில் விஜய் இணைவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பாக பதில் கொடுத்தார்.
தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு முக்கியமான விவகாரம், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற ஊகங்கள்தான். கடந்த சில நாட்களாகவே ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.
இந்த பேச்சுகளுக்கு முக்கிய தொடக்கப் புள்ளியாக ஆந்திர மாநில துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் விஜயுடன் தொலைபேசி மூலம் பேசியதாகவும், தவெகவை NDA கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழகத்தில் திமுகவை எதிர்கொள்ளும் வலுவான மாற்று அணியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டும் என்றும், குறிப்பாக விஜய் NDA-யில் இணைய வேண்டும் என்றும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற ரகசிய தகவல்கள் கசிந்ததாகவும், இது தமிழக அரசியலில் 'மெகா ட்விஸ்ட்' என்று அழைக்கப்படும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பிரதமர் மோடி தமிழகம் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்று மாலை இது தொடர்பாக பேசிக்கொள்ளலாம் என்றார். அப்போது என் டி ஏ கூட்டணியில் விஜய் இணைவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "எப்பா என்னைய மாட்டிவிட்டு கட்சியிலிருந்து நீக்க வெச்சிடாதீங்க.." என திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பாக பதில் கொடுத்துச் சென்றார்.
இதையும் படிங்க: போதை மிருகங்களால் துரத்தி துரத்திப் பாலியல் கொடுமை.. 14 வயது சிறுமி நேர்ந்த துயரம்... அதிமுக கொந்தளிப்பு..!!