சிபிஎம் - இந்து முன்னணியினர் குடுமிப்பிடி சண்டை! மாறி மாறி தாக்கிக் கொண்டதால் போலீஸ் திணறல்!
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். தங்களிடம் வேண்டுமென்றே பிரச்சனை செய்ததாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: தீர்ப்பு சாதகம்னா குதூகலிப்பது.. எதிர்ன்னா வக்கிர புத்தியை காட்டுவது.. திமுகவை டேமேஜ் செய்த இந்து முன்னணி!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால் திண்டுக்கல் பகுதியில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: அப்போ என்ன செஞ்சீங்க.? இப்போ என்ன செய்யுறீங்க.? திமுக அரசை போட்டு தாக்கிய பாலகிருஷ்ணன்.!