செக் மோசடி... இயக்குனர் லிங்குசாமியை கைது செய்ய உத்தரவு... கறார் காட்டிய நீதிமன்றம்...!
செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமியை கைது செய்ய அல்லிக்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான என். லிங்குசாமி, தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வழங்கியவர். ஆனந்தம், ரன், சண்டக்கோழி போன்ற படங்களால் பிரபலமான அவர், 2014-ஆம் ஆண்டில் கார்த்தி மற்றும் சமந்தா நடிப்பில் 'எண்ணி 7 நாள்' என்ற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். இந்தப் படத்துக்காக பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் கடனாகப் பெற்றார்.ஆனால், அந்தப் படம் தொடங்கப்படாமலேயே கைவிடப்பட்டது.
கடனைத் திருப்பிச் செலுத்தாததால், பிவிபி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்றம் லிங்குசாமியின் நிறுவனத்துக்கு கடனைத் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டது. இதன்படி, லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் செக் மூலம் தொகையைத் திருப்பிச் செலுத்த முயன்றனர்.
ஆனால், அந்தச் செக்குகள் வங்கியில் போதிய இருப்பு இல்லாததால் திரும்பி வந்தன. இதையடுத்து, பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.
இதையும் படிங்க: அமைச்சர் மிரட்டும் தொனியில் பேசுறாரு... செவிலியர் சங்க பொதுச்செயலாளர் பகிரங்க குற்றச்சாட்டு...!
எட்டு ஆண்டாக நடந்த வழக்கில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவன இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் குற்றவாளி என அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடன் தொகையை வட்டியுடன் திருப்பித் தர அல்லிக்குளம் நீதிமன்றம் முத்தரவிட்டுள்ளது. கடனாகப் பெற்ற தொகையை வட்டியுடன் சேர்த்து 48 லட்சத்து 68,000 ரூபாயாக இரண்டு மாதத்திற்குள் திருப்பித் தரவும் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: மெஸ்ஸி நிகழ்ச்சியில் குறைபாடு... ஆத்திரத்தில் ரசிகர்கள்... ஏற்பாட்டாளர் ARREST...!