×
 

தவெக ஆட்சியில் தொடரும் அவலம்... வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை...!

ஜெயங்கொண்டம் அருகே  சம்போடை கிராமத்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்  பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது.

சிங்கப்பெண் திட்டத்தில் பெண்களை பாதுகாப்போம் என்று கூறிய தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தவெக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக் கூடாது என்று கருதி ஊடகத்தில் செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென போலீசாருக்கு மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளதாகவும், மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை போலீசார் மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் 26 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செளந்தரராஜன் (56) என்பவர் மாடுமேய்க்க சென்ற இடத்தில் 26 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

அதேபோன்று  அதே கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் (46) என்பவரும், மாற்றுத்திறனாளி பெண்ணை அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் கூறி, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண்ணின் தந்தை மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதில் காலதாமதப்படுத்தி வருவதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

காரணம் தற்போது தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடைபெற்று வருவதாகவும், இதை கருத்தில் கொண்டு தவெக ஆட்சிக்கு  கெட்ட பெயர் வரும் என்று போலீசார் அலட்சியப்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் செய்தியாளர்கள் கேட்கும்போது குற்றவாளிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாகவும் ஆனால் குற்றவாளிகளின் புகைப்படத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதி இல்லாமல் கொடுக்க மாட்டேம் என்று கறாராக தெரிவித்துள்ளனர்.

இதனால் பாலியல் வண்கொடுமைக்கு ஆளான மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு யார் பொறுப்பு என்பது குறித்து உண்மை நிலையை மக்களிடத்தில் எடுத்துச் செல்வதற்கும், அந்தப் பெண்ணுக்கு ஊடகத்தின் வாயிலாக
நீதி கிடைப்பதிலும்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே குற்றவாளிகளுக்கு துணை போகலாமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே தவெக ஆட்சிக்கு போலீசார் வக்காலத்து வாங்காமல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணின் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்த, அவர்களின் புகைப்படங்களை ஊடகத்தின் வாயிலாக தெரிவித்து பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு நீதி கிடைப்பதற்கு போலீசார் உதவியாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சொந்த வீட்டிலேயே கொடூரம்...! - 14 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share