×
 

இனி எப்படி களமாடனும்..? மே 23இல் திமுக இளைஞரணி கூட்டம்..! முக்கிய விவாதம்..!

மே 23 ஆம் தேதி திமுக இளைஞரணி கூட்டம் நடைபெற உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி, வரும் மே 23 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது. இந்தக் கூட்டம் கழக இளைஞரணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சிறப்புரையுடன் இந்த சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரணி செயலாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கழகத்தின் இளைஞர் படையின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வு திமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள், கட்சி வலுப்படுத்தல் மற்றும் இளைஞர்களை ஊக்குவிப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக இளைஞரணி தொடர்ந்து கழகத்தின் வலுவான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் விருதுநகர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மண்டல மாநாடுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து, கழகத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை திறம்பட செய்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் விஜய் அலை!! திணறும் திமுக! சரிவிலிருந்து மீள நடைபயணம் திட்டமிடும் உதயநிதி ஸ்டாலின்!

இந்த ஆலோசனைக் கூட்டம் அத்தகைய முயற்சிகளின் தொடர்ச்சியாகவும், வரும் கால அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் அமையும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். இளைஞரணியின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், கட்சி விரிவாக்கம் மற்றும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகள் போன்றவை இங்கு விவாதிக்கப்படலாம். 

இதையும் படிங்க: பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share