ஓட்டு கேட்டு வராதீங்க..! வேடசந்தூர் திமுக வேட்பாளரை விரட்டி அடித்த மக்கள்..!!
வேடசந்தூர் திமுக வேட்பாளர் சாமி நாதனை பொதுமக்கள் ஓட்டு கேட்டு வராதீங்க எனக் கூறி விரட்டி அடித்துள்ளனர்.
வேடசந்தூர் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் எஸ். காந்திராஜன் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். ஆனால் 2026 தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் மறுக்கப்பட்டு, புதிய முகமான வீரா சாமிநாதனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த முடிவு கட்சியினுள் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. எஸ்.டி. சாமிநாதன் திமுகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் வேடசந்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக பணியாற்றி வருபவர். தொழிலதிபராகவும் அறியப்படும் இவர், வீரா குழுமங்கள் என்ற பெயரில் பல நிறுவனங்களையும் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கட்சியில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் இவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளராகக் கருதப்படுகிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். எப்படியாவது மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக செயல் பட்டு வருகிறது. திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் வரப்புறை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வேடசந்தூர் திமுக வேட்பாளர் சாமிநாதன் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது மக்கள் அவரை விரட்டியடித்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை..! வாசல் வரை வந்துவிட்டது ஆபத்து...! வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் ..!!
கருங்குளம் ஆதி திராவிடர் காலனி பகுதியில் திமுக வேட்பாளர் சாமிநாதன் ஓட்டு கேட்டு சென்றுள்ளார். அப்போது ஓட்டு கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என்று ஊருக்குள் வராதீர்கள் என்றும் வேட்பாளரை பொதுமக்கள் அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அப்பகுதி மக்கள், ஒரு லட்ச ரூபாய் பணம் தர முயன்ற போது அதை வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்து விட்டதாகவும், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் எதையும் செய்து தரவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக வேட்பாளருக்கு இந்த நிலையா?.... சாத்தூரில் நடந்த பகீர் சம்பவம்...!