×
 

மனநோயா? பாசிச மனநிலையா? மாற்றுத்திறனாளிகளை வதைக்கும் திமுக... ஆதவ் அர்ஜுனா சாடல்..!

மாற்றுத்திறனாளிகள் மீது அடக்கு முறையை திமுக அரசு ஏவி இருப்பதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தித்தரக் கோரி சென்னையில் அற வழியில் போராடி வரும் மாற்றுத் திறனாளிகள் மீது திமுக அரசு அடக்குமுறையை ஏவியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 1500-லிருந்து ரூ.2000 வரை மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதார நெருக்கடி, விலைவாசி நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உதவித்தொகையை உயர்த்தித்தருமாறு கடந்த 8 நாட்களாக நியாயமான ஜனநாயக வழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

நேற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தது மட்டுமில்லாமல், இரவு முழுவதும் வண்டியில் அடைத்துவைத்து, அடிப்படைத் தேவைகளுக்குக் கூட அனுமதிக்காமல் உளவியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது அராஜக திமுக அரசு என்று காட்டமாக கூறியுள்ளார். ''மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்கக் கூடிய இப்படி ஒரு அரசை இதுவரை பார்த்ததில்லை என்றும் ஜனநாயகம் இந்த ஆட்சியில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையெல்லாம் செய்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று கைது செய்யப்பட்டவர்கள் கேட்கும் கேள்வி இந்த ஆட்சியின் அவலத்தைத் தோலுரிக்கிறது என்றும் கூறினார். குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரான ஜான்சிராணி திமுக அரசின் இந்த அடக்குமுறையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்றும் இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது என்றும் கூறியுள்ளார். திமுக-வின் சர்வாதிகார ஆட்சியில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஜனநாயக உரிமைக்காகப் போராடினாலும் இதுதான் நிலை என்று தெள்ளத் தெளிவாகப் புரிகிறது என்றும் முதலமைச்சருக்கு இதெல்லாம் தெரியுமா என்றும் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: “இது அதிமுகவோட கோட்டை...” - பாஜக மேடைக்கு கீழ் இருந்து அதிமுக தொண்டர் கொடுத்த ரிப்ளே... ஷாக்கான அமர் பிரசாத் ரெட்டி...!

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் எல்லாம் கூடுதல் உதவித்தொகையினை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிவரும்போது, எப்போதும் விளம்பர மோகத்தில் பெருமை பேசும் முதல்வர், மாற்றுத் திறனாளிகளுக்குரிய நியாயமான தொகையைக் கொடுக்க மறுப்பது ஏன் என்றும் மனசாட்சியின்றி மாற்றுத் திறனாளிகளை ஒடுக்கிவரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செஞ்சீங்களா? திமுக என்ன சாதிச்சது? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share