×
 

ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..! கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றி இருப்பது கண் துடிப்பாக இருக்கக் கூடாது என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தற்போதைய த.வெ.க. அரசு ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தொடர்பாக கொண்டுவந்துள்ள தீர்மானத்தை கண்துடைப்பு நாடகமாகவே கருத வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் சங்கங்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும், இந்த அரசு ஆசிரியர்கள் நலனில் இரட்டைவேடம் போடுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் 2025 செப்டம்பர் 1 அன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என தீர்ப்பளித்தது. அன்றைய திராவிட மாடல் அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யப்படும் என அறிவித்தது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது. செப்டம்பர் 11 அன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களுடன் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, நவம்பர் 22 அன்று முதலமைச்சரை சந்தித்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டன.

நவம்பர் 25 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டு, சட்டத்திருத்தம் அவசியம் என வலியுறுத்தப்பட்டது. நவம்பர் 29 அன்று கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆசிரியர்களின் பணி மற்றும் பதவி உயர்வை பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்திலும் கழக உறுப்பினர்கள் சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்தினர்.முந்தைய அரசு ஆசிரியர்களைப் பாதுகாக்க சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிட்டது. தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத தளர்வு வழங்கப்பட்டது. 2026 ஜனவரி 28 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை.. திமுகவில் 110 புதிய மாவட்டங்கள்! விரைவில் வெளியாகும் பட்டியல்!!

மாற்றுத்திறனாளிகளுக்கு பிப்ரவரியில் 40 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது. பயிற்சி தொகுதிகள் தயாரிப்பும் எஸ்சிஇஆர்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆனால் 2026 மே 29 அன்று உச்சநீதிமன்றம் விலக்களிக்க மறுத்த பிறகு, புதிய த.வெ.க. அரசு சட்டப்போராட்டத்தை தொடரவில்லை என அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார். முந்தைய அரசின் முயற்சிகளை முடக்கியதோடு, உயர்நீதிமன்றத்தில் மதிப்பெண்களை குறைக்க முடியாது என வாதாடிய அரசு, மறுநாள் தீர்மானம் நிறைவேற்றியது கண்துடைப்பு என்றே தோன்றுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றத்தில் வாதாடிய முகமா அல்லது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முகமா எது உண்மை என கேட்ட அவர், ஆசிரியர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதியளித்துள்ளார்.

 

இதையும் படிங்க: திமுகவில் பரபரப்பு.. கனிமொழி - உதயநிதி தரப்புகளுக்கு இடையே மோதல்? உட்கட்சி அதிகாரப் போட்டி உச்சம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share