”இரண்டு கட்சியும் ஒண்ணு சேருறீங்களா?”.... வார்த்தையை விட்ட சபாநாயகர்... திமுக, அதிமுகவினர் கொந்தளிப்பு...!
சட்டப்பேரவையில் குதிரை பேரம் குறித்த விவாதம்... அதிமுக-திமுக உறுப்பினர்கள் அமளி
சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளரும், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு உரையாற்றுவதற்கான நேரம் வழங்கப்பட்டிருந்தது.
சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக எடப்பாடி பழனிசாமி தனது உரையைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நிலையில், இறுதியாக ஒரு கருத்தைத் தெரிவித்தார். அந்தக் கருத்தைத் தெரிவிக்கும்போது, யாரும் கோபித்துக்கொள்ளக் கூடாது என்ற வகையில், “குதிரை பேரம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சில விளக்கங்களை முன்வைத்தார். குறிப்பாக, கட்சித் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அந்தக் கட்சியை விட்டு விலகுவதற்கும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கும் உரிமை உள்ளது என்ற வகையில் அவர் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ-க்களை தவெக இழுத்தது உண்மை! அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு!
அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி “குதிரை பேரம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பாக சபாநாயகர் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார்.
இதனிடையே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், “எங்களுடைய கட்சி குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் பேசக்கூடாது. எங்களுடைய கட்சியைப் பற்றி அவர் எவ்வாறு தனிப்பட்ட முறையில் பேச முடியும்?” என்ற வகையில் அமளியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான திருத்தணி ஹரி, அரூர் சம்பத், முக்கூர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றனர். முக்கூர் சுப்பிரமணியன் தனது இருக்கையில் இருந்து எழுந்து, சபாநாயகர் முன்பாக உள்ள பகுதிக்கு வருவதற்கும் முயற்சி செய்தார்.
தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்ந்து சில கேள்விகளை முன்வைத்துக்கொண்டிருந்தார்.
அதே நேரத்தில், அவை முன்னவரும் எழுந்து பதில் அளிக்க முயன்றார். ஆனால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரைத் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்ட காட்சியைப் பார்க்க முடிந்தது.
அதன்பிறகு, திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், “குதிரை பேர வழக்கு என்றுதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அந்த வழக்குதான் உள்ளது” என்ற கருத்தை சபாநாயகரைப் பார்த்துத் தெரிவித்தார்.
அப்போது சபாநாயகர், “இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறீர்கள்” என்ற வகையில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.
இதையடுத்து, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அதன்பின்னர், சபாநாயகர் உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்தார்.
“நீங்களும் குதிரை பேரம் என்கிறீர்கள்; திமுகவும் குதிரை பேரம் என்கிறது. இருவரும் குதிரை பேரம் என்று சொல்கிறீர்கள் என்ற விதத்தில்தான் நான் என்னுடைய கருத்தைப் பதிவு செய்தேன்” என்ற வகையில் சபாநாயகர் தனது கருத்தைத் தெரிவித்தார்.
இதையடுத்து, திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இல்லை என்றும், இரு கட்சிகளும் தனித்தனியாகவே இருக்கின்றன என்றும் திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் கொரோனா யோபு வேல் எழுந்து, “அவர்கள் அவர்களுடைய கட்சியாக இருக்கிறார்கள்; நாங்கள் எங்களுடைய கட்சியாக இருக்கிறோம். அதிமுகவே கட்சி, திமுகவே கட்சி. இருவரும் ஒரே கட்சியாக இருக்கிறீர்கள், ஒன்றாக இருக்கிறீர்கள் என்ற வகையில் சபாநாயகர் கூறியது பொருள்படும் என்பதால் நாங்கள் பேசவில்லை” என்ற வகையில் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: “நீக்கலாமா? சஸ்பெண்ட் செய்யலாமா?” சண்முகம் விவகாரத்தில் குழம்பும் எடப்பாடி பழனிசாமி?