×
 

திமுக மகளிரணி மாநாடு தேதி மாற்றம்... தலைமை கழகம் முக்கிய அறிவிப்பு...!

திமுக மகளிரணி மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி, கட்சியின் முக்கியமான சார்பு அணிகளில் ஒன்றாக விளங்குகிறது. திமுக 1949-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட போது, திராவிட இயக்கத்தின் அடிப்படையில் சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தியது. இந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக, பெண்களின் உரிமைகள் மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில் மகளிரணி உருவாக்கப்பட்டது.

திமுகவின் வரலாற்றில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கல்வி வாய்ப்புகள், அரசியல் பங்களிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் மகளிரணி முக்கிய பங்காற்றி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், மகளிர் அணி மாநாடு நடந்தது. 

"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து டெல்டா மண்டல மகளிரணி மாநாடு நடைபெற இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பெண்கள் எழுச்சியோடு இந்த மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று உறுதியோடு கூறப்பட்டது.

இதையும் படிங்க: அரைகுறை திட்டங்கள்... ZERO செயல்பாடு... விளம்பரம் மட்டும் படுஜோர்..! TVK காட்டம்..!

இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. வருகிற 19.01.2026 திங்கட்கிழமை, மாலை 4.00 மணி அளவில், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி நடைபெற இருந்த திமுக மகளிர் மாநாடு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுகவை இரண்டாக உடைக்க பாஜக அடுத்த அஸ்திரம்!! சிவசேனாவுக்கு போட்ட அதே ஸ்கெட்ச்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share