விறுவிறு தேர்தல் பணிகள்... ஆட்சி நமதே! வேகம் காட்டும் திமுக...!
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி மற்றும் தேர்தல் பணிகளை திமுக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சிகளின் முக்கிய பகுதியாக, அவர் திமுக நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
இதனிடையே, தமிழ்நாட்டு மக்களை ஒரு பொது இலக்கை நோக்கி ஒன்றிணைத்து, மாநிலத்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாக உத்தியைக் குறிக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்தி வரும் ஆலோசனைகள் இந்த ஓரணியில் தமிழ்நாடு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன.
இதையும் படிங்க: எடப்பாடியின் instagram அரசியல்… திமுகவை விமர்சிச்சா பெரிய ஆளா? பந்தாடிய அமைச்சர் சிவசங்கர்…!
2026 ல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக செயல்பட்டு வருகிறது. இந்த வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி கூட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர, பேரூர் கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இதனிடையே பாஜக அரசின் முன்பு தமிழ்நாடு தலைகுனியாது என்ற பரப்புரை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவின் உருட்டு கடை அல்வா... இது நம்ம லிஸ்டிலயே இல்லையே... நக்கலடித்த இபிஎஸ்…!