ரியல் அண்ட் ரீல்ஸ் எல்லாமே பொய் தான்... தவெகவை எள்ளி நகையாடிய திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்...!
தஏஆ ரியல் மற்றும் ரீல்ஸ் எல்லாம் பொய் செய்தி தான் - திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் விமர்சனம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் இன்றைக்கு பாலியல் வன்கொடுமை செயல்கள் அதிகரித்து உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க த. வெ. க. அரசு கால அவகாசம் கேட்பது குறித்த கோள்விக்கு, நகைச்சுவைக்குரிய விஷயமாக தெரிகிறது. 108 என அதிக இடங்களை பெற்ற கட்சியாக வந்துள்ளது. முதல்வராக இருக்கும் அவர் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளது ஆனால் அவர்களால் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை.
குறிப்பாக பெண்கள்,குழந்தைகளுக்கு அதிமான வன்முறையாக உள்ளது. நிறைய இடங்களில் த. வெ. க. நிர்வாகிகளே ஈடுபடுகின்றனர். அதைக் கூட தட்டிக் கேட்க முடியவில்லை. டீக்கடைக்காரரிடம் காசு கொடுக்க மாட்டேன் என்று சொல்வது. ஸ்ரீவைகுண்டத்தில் த. வெ. க. பெண் ஆதரவாளர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதை செய்தவர்கள்
த. வெ. க. நிர்வாகிகள்
இதையும் படிங்க: “ஹலோ ப்ரோ... விஜய் சார் கேக்குதா? - தவெக தலைவரை தாறுமாறாக சாடிய திமுக மாஜி அமைச்சர்...!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீநாத் மதன் ராஜா என்ற இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். அதைப் பற்றி யாரும் கேட்கவில்லை. தொகுதி மாறி போய் அமைச்சர் ஸ்ரீநாத் புன்னனைக்காயலில் போய் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். அப்போ அவர் என்ன மன நிலையில் இருக்கிறார்? என்ன நிலையில் இருக்கிறார் என்று யோசிக்க வேண்டும். எந்தத் தொகுதி என்று தெரியாத நிலையில் இருக்கின்றனர்
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் போன்றே முதல்வர் விஜய் பேசினார் அதே போன்று எழுதிய ஸ்கிரிப்ட், அதே உணர்ச்சி, அதே நடிப்புடன் பேசினார். அதையெல்லாம் ஊரறியும் உலகறியும் சகஜ நிலைக்கு வர வேண்டும். தமிழக மக்களை கட்டிக் காக்க வேண்டும். தமிழக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்
வந்தே மாதரம் பாடல் பிரச்சனை குறித்து பாட மாட்டோம் என்று ஒன்றுமே சொல்லவில்லை. வந்தே மாதரம் தொடர்பாக அனுப்பட்ட சுற்றறிக்கையில் கட்டாயமாக அது பாட வேண்டும் என்று கூறவில்லை என்று கேரளா அமைச்சர் கூறுகிறார். அதை ஏன் உங்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதற்குப் போய் அங்கு போய் (பிரதமர் நரேந்திர மோடி) மனு கொடுத்தேன் என்கிறார்
எதைக் குறை சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் முதல்வர் ஆறு மாத காலம் அவகாசம் கேட்கிறார். எதையும் குறை சொல்லாதீங்க என்று அதற்காக நடக்கின்ற கொள்ளைகளையும் கொலைகளையும் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளையும் நம்மால் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது. வலிமையான எதிர்க்கட்சியாக தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார், எங்கள் தலைவர் மு. க. ஸ்டாலின் இருக்கிறார். அவர்களின் குற்றம் குறைகளை சுட்டிக் காட்டுவது தான் எதிர்க்கட்சிகளின் கடமை என்பதால் சுட்டிக்காட்டி வருகிறோம் என்றார்.
திமுகவில் கூட்டணி கட்சிகளாக இருந்தவர்கள் திமுக பற்றி விமர்சனம் செய்வது பற்றிய கேள்விக்கு, கூட இருந்து கொண்டே குழி தோண்டி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. துரோகம் என்பது எங்கள் தொண்டர்களின் கருத்து என்றார். விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து த. வெ. க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நடைமுறைப்படுத்தவில்லை என விவசாயிகள் போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு :
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் 5ஏக்கர் கீழே உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி, 5 ஏக்கர் மேலே உள்ளவர்களுக்கு பாதி தள்ளுபடி என்று தெரிவித்திருந்தனர். ஆனால் இன்றைக்கு ஐந்து ஏக்கர் 50,000 ஆக மாறிவிட்டது. 80% பேர் பயன் பெற்றதாக அவர்கள் கூறுகின்றனர்
த. வெ. க. ரியல் மற்றும் ரீல்ஸ் எல்லாம் பொய் செய்திகளாக பரப்பி வருகின்றனர். இது தான் உண்மை. விரைவில் மக்கள் புரிந்து கொள்வார்கள். விரைவில் விஜயின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும் என்றார்.
இதையும் படிங்க: விஜயை சீண்டிப்பாக்குறது கூட்டணிக்கு நல்லத்தில்லை! மேகதாது விவகாரம்! சிவக்குமார் அடக்கி வைங்க! காங்.,க்கு தவெக கோரிக்கை!