தமிழ் படைப்பாளிகளுக்கு இதையெல்லாம் செய்ய துடிக்கிறோம்! கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கத்தில் முதல்வர் பேருரை...
கலைஞர் கருணாநிதி சட்டமன்ற உரைகள் சட்டமன்ற மாண்புக்கு இலக்கணம் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கத்தை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றிய போது கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி பேசினார். கலைஞர் இந்திய முகமாக மாறிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது என்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்தவர் கலைஞர் எனவும் கலைஞரின் சட்டமன்ற உரைகள் சட்டமன்ற மாண்புக்கு இலக்கணம் எனவும் கூறினார்.
வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்தவர் கலைஞர் கருணாநிதி எனது கூறிய முதல்வர் ஸ்டாலின், தனது வாழ்வையே தமிழ் சமூகத்தின் உயர்வுக்காக ஒப்படைத்தவர் கலைஞர் எனவும் ஒரு தலைப்புக்குள் சுருக்கி விட முடியாதவர் கலைஞர் என்றும் பேசினார். ஐந்து முறை தமிழக முதலமைச்சர், 50 ஆண்டுகள் தமிழ் இயக்கத்தின் தலைவராக இருந்தவர் கலைஞர் எனவும் செங்கோலை யார் வேண்டுமானாலும் பறித்து விடலாம் ஆனால் எனது எழுத்துக்களை யாராலும் பறிக்க முடியாது என்று அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு... கட்டணத்தில் மாற்றமில்லை! அமைச்சர் திட்டவட்டம்..
படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கம் என்று பேசிய முதல்வர், எழுத்தாளர்களை தமிழ்ச் சமூகம் என்றும் கொண்டாட தவறியதே இல்லை எனவும் 36 தமிழ் அறிஞர்களின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன எனவும் தெரிவித்தார்.
உலக அளவிலான பல்கலைக்கழகங்கள் ஜே.என்.யூ.வுடன் பணியாற்ற விரும்புகின்றனர் என கூறிய அவர், எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகமாக இருக்க முடியும் என்றும் ஒரு கோடி மதிப்பிலான வீடு வழங்கி பத்திரப்பதிவு செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்கும் என அறிவித்ததாக கூறினார்.
இதையும் படிங்க: MBA மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்...அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன குட் நியூஸ்!