×
 

அச்சாணி இல்லாத அரசு.., அது போலதான் பஸ்! நொறுக்கும் அன்புமணி..!

பேருந்துகளையும், திராவிட மாடல் அரசையும் மாற்றுவது தான் விபத்தில்லா பயணத்திற்கு எளிதான தீர்வு என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து குற்றாலத்திற்கு 87 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து கடையநல்லூர் அருகே சென்ற போது திடீரென பின்பக்க சக்கரங்கள் கழன்று தனியாக ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டயர் வெடித்து சிதறியபோது, ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது சக்கரங்கள் கழன்று ஓடின. இதனால் பேருந்தின் பின்பக்கம் அமர்ந்திருந்த மாணவர்கள் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற கிராமத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்தின், பின்புற அச்சு உடைந்து இரு பின் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடிய, விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் காயமடைந்துள்ள நிலையில், ஓட்டுனரின் திறமையால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதையும் படிங்க: பி.டி.ஆர். பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.. அன்புமணி அதிரடி!!

அரசுப் பேருந்துகளில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடுவதும், இருக்கைகள் உடைந்து வெளியில் தெறிப்பதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டதாகவும், அரசு எவ்வாறு அச்சாணி இல்லாமல் இயங்குகிறதோ, அதே போல் தான் அரசுப் பேருந்துகளும் எந்த பிணைப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஒவ்வொரு பேருந்து விபத்து நடக்கும் போதும் ஓர் ஓட்டுனரையோ, நடத்துனரையோ, தொழில்நுட்பப் பணியாளரையோ பணியிடைநீக்கம் செய்து விட்டு திராவிட மாடல் அரசு கடமையை முடித்துக் கொள்வதாக குற்றம்சாட்டினார்.

பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும்., தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும்., இது தான் விபத்தில்லா பயணத்திற்கும், அரசு நிர்வாகத்திற்கும் எளிதான தீர்வு என அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share