×
 

#BREAKING அடிச்சது ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.5000... வங்கி கணக்கில் இன்று டெபாசிட்...முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு...!

1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை 1000 ரூபாயில் 1,500 ரூபாய் அல்லது 2,000 ரூபாயாக அதிகரிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார். 

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இப்போது 1.30 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. அந்த தொகை பெண்களின் வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

புதுச்சேரியில் சமீபத்தில் மகளிர் உரிமைத் தொகையானது 1000 ரூபாயில் இருந்து 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டிலும் திமுக மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குமா? என பெண்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த திட்டத்திற்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இதன் மூலமாகவே பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் மகளிர் உரிமைத்தொகையை 1000 ரூபாயில் 1,500 ரூபாய் அல்லது 2,000 ரூபாயாக அதிகரிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது உறுதியாகியுள்ளது. 

இதையும் படிங்க: அதிரடி பிளானை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்..!! 9,801 பேருக்கு நாளை பணி நியமன ஆணை..!!

இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திமுக அரசு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வழங்கவுள்ளது.

1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! 

#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! எனத் தெரிவித்துள்ளார். 
 

இதையும் படிங்க: தமிழக அரசியலில் பரபரப்பு... காங்கிரஸுக்கு 'NO' சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... ஒபனாக உடைத்துவிட்ட திமுக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share