திமுக வெறியாட்டத்திற்கு பாஜக அஞ்சாது...! நயினார் நாகேந்திரன் ஆவேசம்..!
பாஜக நிர்வாகியை திமுக பிரமுகர் வெட்டியதாக கூறப்படும் சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை திருமங்கலத்தில் பாஜக பிரமுகர், திமுக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். நில ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் பாஜக மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் மணிகண்டன் திமுக பிரமுகரால் தாக்கப்பட்டுள்ள கொடூரம் கண்டனத்திற்குரியது என்று கூறினார்.
ஆளும் கட்சி ஆதரவில் அரசு சொத்துகளை ஆக்கிரமிக்கும் திமுக உடன்பிறப்புகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மணிகண்டன் புகார் அளித்த நிலையில், பட்டப்பகலில் அவரது வீட்டு வாசலிலேயே கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் திமுக பிரமுகர் ஆறுமுகம் சரமாரியாகத் தாக்கியுள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். இது தான் சட்டம் ஒழுங்கின் லட்சணமா என்றும் இது தான் திராவிட மாடலா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுககாரன் எனும் போர்வையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முதல் உயிரைப் பறிக்கும் வரையிலான தாக்குதல் வரை அனைத்துக் குற்றச்செயல்களிலும் ஈடுபடும் உடன்பிறப்புகளை அடக்குவதை விட்டுவிட்டு, இது இரும்புக்கர ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின் பேசுவது வெட்கக்கேடானது என சாடினார்.
இதையும் படிங்க: கரூர் அதிமுகவுக்கு கட்டம் கட்டிய செந்தில் பாலாஜி... திருத்தொண்டர் அறக்கட்டளை ராதாகிருஷ்ணனுக்கு ஸ்கெட்ச்...!
தாம் வகிக்கும் பொறுப்பில் சிறிதும் அக்கறையிருந்தால், உடனடியாகக் கட்சி பேதமின்றி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும் எத்தனைக் கொடூர தாக்குதல்களாலும் கொலை மிரட்டல்களாலும் தேசியவாதிகளை முடக்கிவிட முடியாது என்பதைத் திமுக அரசு உணரவேண்டும் எனவும் தெரிவித்தார். திமுகவின் தில்லாலங்கடிகளை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து அஞ்சாது நாங்கள் வெளிப்படுத்துவோம்., தீயசக்தி திமுகவைத் துரத்தியடிப்போம் என்று உறுதிபட கூறினார்.
இதையும் படிங்க: "புதுசா கட்சி ஆரம்பிச்ச உனக்கே இவ்வளவு அதப்புன்னா... எங்களுக்கு எவ்வளவு இருக்கும் ..." - மீண்டும் விஜய்யை சீண்டிய உதயநிதி...!