×
 

எங்க ஓட்டு வேணாமா..? நாமக்கல்லில் திமுக வேட்பாளரை ரவுண்டு கட்டிய மக்கள்..!!

சேந்தமங்கலம் தொகுதி திமுக வேட்பாளரை அப்பகுதி விவசாயிகள் கேள்விகளால் துளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்தது போக 164 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 164 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். அதன்படி சேந்தமங்கலம் தொகுதியில் பூ மலர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் பூ மலர் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார். இன்று அவரிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. சேந்தமங்கலம் தொகுதியானது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான பகுதியாகும். இங்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக கே. பொன்னுசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால், அவர் சமீபத்தில் உயிரிழந்ததால், இந்தத் தொகுதியில் புதிய வேட்பாளராக பூமலர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூமலர் வாக்கு சேகரிக்க சென்றார். மோகனூர் அடுத்த வளையப்பட்டி பகுதியில் பூ மலர் வாக்கு சேகரித்து வந்தார். அப்போது, சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் தங்கள் பிரச்சனை குறித்து வேட்பாளரிடம் முறையிட்டனர்.

இதையும் படிங்க: தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

அப்போது திமுகவினர் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். ஓட்டு கேட்க தான் வந்திருக்கிறோம் என்றும் வேறு எதுவும் பேச வேண்டாம் எனவும் கூறியதால் விவசாயிகள் கொந்தளித்தனர். அப்போது எங்கள் வீட்டு உங்களுக்கு வேண்டாமா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் திமுக வேட்பாளர் பூமலர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

இதையும் படிங்க: தேர்தல் வந்தாச்சு... ஓட்டு போடுங்க மக்களே..!! திருச்சியில் கே.என்.நேரு பரப்புரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share