×
 

ஒரே ஓட்டு வித்தியாசம்..!! மறுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு தொடர்ந்த வழக்கை பெரியகருப்பன் திரும்ப பெற்றார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற சமீபத்திய தேர்தலில், திமுக வேட்பாளர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளுடன் வெற்றி பெற்ற நிலையில், பெரியகருப்பன் 83,364 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்த மிக நெருக்கமான தோல்வி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பெரியகருப்பன் தரப்பில் முதலில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட ஒரு தபால் வாக்கு, தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது. அந்த வாக்கு தனது தொகுதிக்கு சேர்க்கப்பட வேண்டும் என்றும், அதுவரை வெற்றியாளரின் சட்டசபை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கின் போது, தேர்தல் ஆணையத்தின் நடைமுறை மற்றும் புகாருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது. மனுதாரர் தரப்பில், அந்த தபால் வாக்கு சரியாகக் கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தால் இரு வேட்பாளர்களும் சம வாக்குகளைப் பெற்றிருப்பர் என்றும், அப்போது குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டிருக்கக் கூடும் என்றும் வாதிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகளையும் பிறப்பித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் தொடர்புடைய மனுக்கள் வந்தன.

இதையும் படிங்க: பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

இந்த நிலையில், தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை, திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் திரும்பப் பெற்றார். திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெரியகருப்பன், அத்தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவாச சேதுபதி வெற்றியை எதிர்த்து தற்போது தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளதால் ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளார். 

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் நில அபகரிப்பு வழக்கு..! MR விஜயபாஸ்கர் ஆஜர்... துருவி துருவி விசாரணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share