பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் மிக்க ஒரே தலைவர் ஸ்டாலின்தான்..! அமைச்சர் ரகுபதி பரப்புரை.!!
அறந்தாங்கியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ரகுபதி பரப்புரை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் பிஜேபியை காலுன்ற விடமாட்டோம் என சபதம் எடுத்துருக்கின்ற இயக்கம் தான் திமுக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து அமைச்சர் ரகுபதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து நாகுடி கடைவீதியில் அமைச்சர் ரகுபதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்தியாவிலேயே காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், இந்த திட்டம் தற்போது 8 ம் வகுப்பு வரை விரிவு படுத்தப்பட உள்ளது.
அதே போன்று மகளிர் உரிமை தொகை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இது போன்று மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்ய உள்ளது என்றர். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கில் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவை துணிச்சலோடு எதிர்த்து நிற்கும் ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தை வஞ்சிக்கும் விதமாக தொலை நோக்கு பார்வையில் குழந்தை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: எனக்கு விஜய் படம் பாக்காம தூக்கம் வராதே..! பெரம்பூர் தொகுதியில் திமுகவை ஆதரித்து நடிகர் சத்யராஜ் பரப்புரை..!
அதனை பின்பற்றிய தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதி வரையறை என்ற பெயரில் குறைந்த தொகுதிளை வகுத்துவிட்டு, அவர்களுக்கு ஆதரவு மாநிலங்களில் தொகுதியை அதிகப்படுத்தும் நோக்கில் செயல்பட்ட ஒன்றிய அரசின் மசோதா நேற்று தோற்கடிக்கப்பட்டது. மக்கள் விரோத பாஜகவை எதிர்த்து போராடும் வல்லமை திமுகவிற்கு மட்டும்தான் உள்ளது. எனவே மக்கள் அனைவரும் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் நிர்வாகிகள் பொருப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மக்களுடன் கைகுலுக்கி வாக்கு கேட்ட முதல்வர்! அவினாசி தேர்தல் களத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி!