×
 

65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

தமிழக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை, இன்று (பிப்ரவரி 27, 2026) வடசென்னையின் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று மாலை வடசென்னை, ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றப் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சுமார் 65,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் திமுக நிர்வாகிகள் தான். தனது கட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தும் இலட்சணம் இதுதான் என அண்ணாமலை சாடினார். தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்துப் பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் வளர்ந்தது திமுக குடும்பம் மட்டும்தான். இன்று தமிழகத்தில் ஒரு ரேஷன் அட்டையின் மீது 4 லட்ச ரூபாய்க்கும் மேல் கடன் உள்ளது. மாநிலத்தைக் கடன்கார மாநிலமாக மாற்றிவிட்டு வளர்ச்சியைப் பற்றிப் பேச திமுகவினர் வெட்கப்பட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

ஏழைகளை முன்னேற்றாமல், அரசே சாராயம் விற்றுக் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதுதான் திராவிட மாடல் சாதனையா? என அவர் கேள்வி எழுப்பினார். போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களுக்குத் துரோகம் மட்டுமே இழைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். வரவிருக்கும் தேர்தலில் மக்கள் திமுக-வைத் தூக்கி எறிவார்கள் என்றும், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தாய்மார்களுக்கான நல்லாட்சி அமைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் முழு ஆதரவு அளிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாஜக இளைஞரணி மாநில தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். ராயபுரத்தின் குறுகிய சந்துகளில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்! தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share