×
 

வார்த்தையை விட்ட வேளாண் துறை அமைச்சர்... எழுந்து நின்று ஆக்ரோஷமாக கத்திய திமுக எம்.எல்.ஏ.க்கள்...!

தனைக் கேட்ட திமுகவினர் பயங்கர கோவத்துடன் கத்த ஆரம்பித்தனர். இதனால் சட்டப்பேரவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

தவெக அரசு தனது முதல் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இந்த நாளில், பிரதான எதிர்க்கட்சியான திமுக பல்வேறு திட்டங்களுடன் பேரவைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தது இன்று சட்டப்பேரவைக்குள் சர்ச்சை வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி ஆகிய மூன்று முக்கிய பிரச்சினைகளையும் இன்று சட்டப்பேரவையில் எழுப்ப திமுகவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் உரையின் ஆரம்பத்திலேயே வேளாண் துறை அமைச்சர் வினோத் சொன்ன ஒற்றை வார்த்தையால், அவையே ரணகளமாக மாறியது. 

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஜாக்பாட்..! களமிறங்கிய AI..!! வேளாண் பட்ஜெட்டில் செம்ம ட்விஸ்ட்..!!

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கிய அமைச்சர் வினோத், "பணநாயகத்தைத் தோற்கடித்த பாமரனின் ஜனநாயக முதல்வர் நீங்கள். திரைமன்றங்களில் மட்டுமல்ல, சட்டமன்றத்திற்கும் நாயகன் நீங்கள்தான்.

உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி, ஊழல் ஒவ்வொன்றையும் களையெடுத்து, சமத்துவம் எனும் செடியை வளர்த்து, மக்களாட்சி எனும் பெரும் மரத்தைப் பேணிக் காக்கும் கோட்-சூட் அணிந்த விவசாயி நீங்கள்.

விசில் என்பது ஒலி மட்டுமல்ல; அது பாமரர்களின் மொழி. அதுவும் உலகின் பொதுமொழி. விசில் காற்று இசைத்த முதல் ராகம். மனிதன் பயன்படுத்திய முதல் தொலைபேசி. காது கொடுத்து கேளுங்கள். விசில் தனியாக ஒலித்தாலும் கம்பீரம் குறையாது. அணியோடு சேரும்போது அகம்பாவம் இருக்காது.

ஊரெங்கும் நாற்றமெடுத்த ஊழலை ஒழிக்க, உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை. ஒற்றுமையோடு, சாதி–சமயம் மறந்து நாங்கள் கொண்டாட, உங்களைப் போன்ற ஒரு வரம் இல்லை.

இனி எப்போதும் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி ஒன்று, நீங்கள் பேசுவதாக இருக்கும்; இல்லையெனில், உங்களைப் பற்றிப் பேசுவதாக மட்டுமே இருக்கும்."

இதனைக் கேட்ட திமுகவினர் பயங்கர கோவத்துடன் கத்த ஆரம்பித்தனர். இதனால் சட்டப்பேரவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதாவது அவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இல்லாத தகவல்களை வேளாண் துறை அமைச்சர் வாசித்ததால் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அப்போது சபாநாயகர் தலையிட்டு, "உட்காருங்கள்... உட்காருங்கள்... எல்லோரும் உட்காருங்கள். நான் சொல்கிறேனே, உட்காருங்கள். நான் சொல்லும்போது குறுக்கிடாதீர்கள்” 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் அவர்கள், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அவை முன் வைத்திருக்கிறார். அந்த அறிக்கையை மட்டும் விரிவாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் சொல்லிவிட்டேன்; தயவுசெய்து குறுக்கிடாமல் உட்காருங்கள்." எனக்கூறி எதிர்க்கட்சியினரை சமாதானப்படுத்தினார். 

இதையும் படிங்க: AI முதல் வேளாண்மை வரை... பட்ஜெட்டில் என்னென்ன? அமைச்சர் வினோத் உரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share