×
 

இனப்படுகொலை நடக்குது.. தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்..! வெள்ளை மாளிகையில் சர்ச்சை வீடியோ காட்சி!!

தென் ஆப்ரிக்காவில் வெள்ளை இன விவசாயிகள் இனப்படுகொலை செய்யப்படுவதாக தென்னாப்பிரிக்கா அதிபர் ரமபோசா முன்னிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியது சர்ச்சையாகி உள்ளது.

தென்ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் போன்ற, எலான் மஸ்க்கின் நிறுவனங்களுடனான வாய்ப்புகள் பற்றி ஆலோசிப்பதற்காக சிரில் ராமபோசா திட்டமிட்டு உள்ளார். எனினும் தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான மஸ்க், வெள்ளை இன மக்களுக்கு எதிரான கொள்கைகளை ராமபோசா தொடர்கிறார் என்று குற்றச்சாட்டாக கூறி வருகிறார். ஆனால், இதனை ராமபோசா மறுத்து வருகிறார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து பேசினார்.

ராமபோசா உடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் ஒன்றாக நடத்தினார். இந்த சந்திப்பு, அமெரிக்காவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே உறவை வலுப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இது வழக்கமான சந்திப்பாக இல்லாமல், டிரம்பின் ஒரு செயலால் பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது.  ஏனென்றால், சந்திப்பின்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மக்களுக்கு, குறிப்பாக வெள்ளை இன விவசாயிகளுக்கு எதிராக இனப்படுகொலை நடப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: இந்தியர்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: அதிபர் ட்ரம்ப் திட்டம்..!

அவர் இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க ஒரு வீடியோவையும், செய்தித்தாள் கட்டுரைகளையும் காட்டினார். இது தென்னாப்பிரிக்க அரசாங்கத்தை நேரடியாக விமர்சிக்கும் வகையில் இருந்தது. தொடர்ந்து டிரம்ப், வெள்ளை இன விவசாயிகள் படுகொலையை ஆப்பிரிக்க அரசு தடுக்க தவறி விட்டது என குற்றச்சாட்டாக கூறினார். அவர்களுக்கு எதிரான நில அபகரிப்புகளும் அனுமதிக்கப்பட்டு உள்ளன என டிரம்ப் குற்றச்சாட்டாக கூறினார். அப்போது, ராமபோசா மற்றும் அவருடைய அரசுக்கு எதிராக டிரம்ப் பேசியது பதற்றம் ஏற்படுத்தியது.

டிரம்ப், தனது குற்றச்சாட்டை இன்னும் வலுவாக காட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு வெள்ளை மாளிகையில் ஒரு வீடியோவை திரையிட உத்தரவிட்டார். அவர் திரையிட்ட அந்த வீடியோவில் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின விவசாயிகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றியது. இந்த வீடியோவை போட்டுக்காட்டுவதற்காக ட்ரம்ப்  அறையின் விளக்குகளை அணைக்கச் செய்து, பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த வீடியோவைக் காட்டினார்.

வெள்ளை இன விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுவதும் மற்றும் படுகொலை செய்யப்படுவதும் நடக்கிறது. இதுபோன்ற வன்முறை மற்றும் இனவெறி சட்டங்களால், வெள்ளை இன தென்ஆப்பிரிக்கர்கள் வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்னார். வீடியோவை போட்டு காட்டி ட்ரம்ப் குற்றச்சாட்டு வைத்த நிலையில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா சற்று நேரம் அதிர்ச்சியாகி  டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்தார். 

தென்னாப்பிரிக்காவில் வன்முறைகள் உள்ளன, ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் குறிவைத்தவை இல்லை என்று அவர் விளக்கினார். எல்லா இன மக்களும் குற்றங்களால் பாதிக்கப்படுவதாகவும், இதை இனப்படுகொலை என்று சொல்வது தவறு என்றும் அவர் கூறினார். சந்திப்பின் போது டிரம்பின் இந்த செயல், அமெரிக்காவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கியது. இந்த நிலையில் டிரம்ப் அவர் கூறியதற்கான சான்றுகளை நிரூபிக்க வேண்டும் என்று ராமபோசா அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: இந்தியா - பாக்., போரை நிறுத்தியதே நான் தான்.. மார் தட்டிக்கொள்ளும் ட்ரம்ப்.. புகையும் சர்வதேச அரசியல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share