×
 

போதைப் பொருள் கடத்தல்..! போலீஸ் வலையில் DRUG டீலர்.. சிக்கியது எப்படி..?

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஆப்பிரிக்காவை சேர்ந்த முக்கிய டீலர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஏற்கனவே பன்னிரண்டு பேர் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில், கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டது. இவர்கள் பெங்களூரில் இருந்து போதைப் பொருட்களை வாங்கி வந்து இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சப்ளை செய்து வந்துள்ளதாக தெரியவந்தது. 

இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஆப்பிரிக்காவை சேர்ந்த முக்கிய டீலர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆப்பிரிக்காவை சேர்ந்த அபூ மற்றும் ராகுல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் டெல்லியில் இருந்து இந்த போதைப் பொருள் சப்ளை செய்து வந்ததாக தெரியவந்தது. பின்னர் இரண்டு பேரும் விமான மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட நிலையில்,15 கிராம் கொகைன், 5 கிராம் மெத், ஏழு கிராம் ஹெராயின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: 14 பேர் சேர்ந்து சிறுமிகளை சீரழித்த கொடூரம்... புதுவையை உலுக்கும் சம்பவம்!

இவர்கள் கிரிண்டர் ஆப் மூலம் போதை பொருள் சப்ளை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த ஆப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா போர் தொடுத்தால் நாங்கள் இங்கிலாந்துக்கு ஓடிடுவோம்..! குலை நடுக்கத்தில் பாக்., எம்.பி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share