ரொக்கம் தாண்டி 'ஜி-பே' லஞ்சம்! தமிழகத்தையே உலுக்கிய DVAC மெகா ஆபரேஷன்!
லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆபரேஷன் மின்னல் வேகம் மூலம் தமிழகத்தின் 41 உள்ளாட்சி மையங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் கணக்கில் வராத ரூ.31.27 லட்சம் ரொக்கமும், ரூ.26.70 லட்சம் கூகுள் பே டிஜிட்டல் லஞ்சப் பணமும் சிக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் லஞ்ச நடமாட்டம் மற்றும் முறைகேடுகள் கட்டுக்கடங்காமல் போயிருப்பதாகப் பெறப்பட்ட ரகசிய இன்புட்ஸ் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரின் அதிரடி உத்தரவின் பேரில் இன்று மாநிலம் தழுவிய அளவில் ஒரு பிரம்மாண்ட ரெய்டு நடத்தப்பட்டு ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் உலுக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள், அந்தந்த மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் கைகோர்த்து, இன்று வெள்ளிக்கிழமை காலை முதலே தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் திடீர் சோதனையில் இறங்கி அதிரடி ஆபரேஷன்’ நடத்தினர். இந்த அதிரடி வேட்டையில், அரசு ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத கணக்கிலடங்கா ரொக்கப் பணம் மற்றும் அதிர்ச்சியூட்டும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை லஞ்சத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்தி நடத்தப்பட்ட டிஜிட்டல் முறையிலான லஞ்சப் பரிவர்த்தனைகளும் கையும் களவுமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மெகா சோதனையின் போது, எந்தவித கணக்கும் ஆவணங்களும் இல்லாத தூய ஹார்ட் கேஷ் மட்டுமே ரூ.31,27,110/- லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டது. அதைவிட முக்கியமாக, டெக்னாலஜி மூலம் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவலாம் என நினைத்து, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கூகுள் பே (G-Pay) மூலமாகப் பெறப்பட்ட ரூ.26,70,990/- மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் இந்த சோதனையில் மிகத் துல்லியமாகத் துப்புலக்கப்பட்டு, கண்டறியப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இன்றைய ஒரே நாளில் மட்டும் ரூ.57,98,100/- லஞ்சப் பணம் அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் மட்டும் கோடம்பாக்கம், திருவேற்காடு, தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயபுரம் மற்றும் புழுதிவாக்கம் ஆகிய கார்ப்பரேஷன் மண்டல அலுவலகங்களில் புகுந்து அதிகாரிகள் தங்களது வேட்டையை நடத்தினர். இதேபோல், தென் மாவட்டங்களான மதுரை, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை மற்றும் காரைக்குடி கார்ப்பரேஷன் அலுவலகங்களிலும், டெல்டா மற்றும் பிற மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், அரியலூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 41 மையங்களில் இந்த சோதனையானது மிக ரகசியமாகவும் துல்லியமாகவும் அரங்கேற்றப்பட்டது.
இதையும் படிங்க: சினிமாவிலிருந்து விடுபட்ட விஜய், இன்னும் சினிமா செயல்களிலிருந்து விடுபடவில்லை! கி.வீரமணி விமர்சனம்!
சிவகங்கை காரைக்குடி கார்ப்பரேஷனில் ரூ.8.06 லட்சமும், திருப்பத்தூர் நகராட்சியில் ரூ.5.79 லட்சமும், அரியலூர் நகராட்சியில் ரூ.4.34 லட்சமும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (G-Pay) மூலமாக மட்டுமே லஞ்சமாகப் பெறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளையே அதிரவைத்துள்ளது. மேலும், தூத்துக்குடி கார்ப்பரேஷனில் அதிகப்படியாக ரூ.7,49,900/- நேரடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்சப் பணத்தை ரொக்கமாக வாங்கினால் ரெட்-ஹேண்டட்டாக மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து, 'ஜி-பே' மூலம் டிஜிட்டல் ரூட்டில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் தந்திரத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தங்களது கூர்மையான விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து உடைத்துள்ளனர். இந்த அதிரடி சோதனையைத் தொடர்ந்து, முறைகேடுகளில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது துறை ரீதியான கடுமையான சஸ்பென்ஷன் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுவதால், கோட்டை முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை உள்ள ஊழல் புள்ளிகள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!