திமுக அமைச்சர்களின் ஊழல் லிஸ்ட்!! 6 மணி நேரம் மீட்டிங்!! களமிறங்கும் அமலாக்கத்துறை தனிப்படை! கலக்கத்தில் கட்சிகள்!
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அரசியல் கட்சிகள் மற்றும் தொழில் அதிபர்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதை கண்காணிக்க அமலாக்கத்துறை தனிப்படைகளை அமைத்துள்ளது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டுள்ள அமலாக்கத்துறை (ED) இயக்குநர் ராகுல் நவீன், தமிழகத்தில் நிலுவையில் உள்ள முக்கிய ஊழல் வழக்குகள் குறித்து தீவிர ஆய்வு நடத்தி வருகிறார். குறிப்பாக திமுக அமைச்சர்கள் பொன்முடி, வைத்திலிங்கம், நேரு உள்ளிட்டோரின் துறைகளில் நடந்ததாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கவனம் செலுத்தியுள்ளார்.
நேற்று (பிப்ரவரி 27) நடந்த ஆய்வு கூட்டத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை அதிகாரிகள், சென்னை மண்டல ED அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக போலீஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ED-க்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பது முக்கிய குற்றச்சாட்டாக எழுப்பப்பட்டது.
பல வழக்குகளில் பதிவான FIR-களின் நகல்களை மாநில போலீஸார் தர மறுப்பதாகவும், விசாரணைக்கு தேவையான ஆவணங்கள், சாட்சிகள் விவரங்கள் வழங்கப்படவில்லை என்றும் சென்னை ED அதிகாரிகள் ராகுல் நவீனிடம் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் நேரு ஊழல் வழக்கு!! சிக்கப்போகும் அதிகாரிகள்?! 6 ஐஏஎஸ், 3 ஐபிஎஸ் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு திக்!! திக்!!
இதை ஏற்க மறுத்த ராகுல் நவீன், "விசாரணை இறுதி கட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளிலும் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார்.
மேலும், வரும் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றம், ஊழல், லஞ்சம் போன்றவற்றில் ஈடுபடுவதை தீவிரமாக கண்காணிக்க தனிப்படைகளை அமைக்கவும், சிறப்பு கண்காணிப்பு குழுக்களை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் உள்ள துறைகளில் நடந்ததாக கூறப்படும் ஊழல் வழக்குகளில் ED-யின் இந்த தீவிர நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்களின் துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ED-யுடன் ஒத்துழைக்காதது குறித்தும், தேவையான ஆவணங்களை தர மறுப்பது குறித்தும் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மீது ED-யின் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில வாரங்களில் பல முக்கிய வழக்குகளில் ED-யின் அடுத்தகட்ட நடவடிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரசு பணிகளை விற்று கல்லா கட்டுகிறதா திமுக?!! விழா நடத்துவது தான் கேடு! வெளுத்து வாங்கும் நயினார்!!