அமலாக்கத் துறையினர் விறுவிறு விசாரணை..! ICICI மேலாளரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்..!
டாஸ்மாக் பண பரிவர்த்தனை தொடர்பாக ஐசிஐசிஐ மேலாளரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீடு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினருடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதேபோல், சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும், சென்னையில் தேனாம்பேட்டை, தி.நகர், அண்ணா சாலை, பெசன்ட் நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு ஆவணங்களை கொண்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை அண்ணாநகர் ஐசிஐசிஐ வங்கியின் கிளை மேலாளர் சபரிவாசனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பண பரிவர்த்தனை நடைபெற்ற நிலையில், டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கில் வங்கி மேலாளரிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் ரெய்டில் கமுக்கமாக இருக்கும் ஸ்டாலின் அதிமுகவை பழிவாங்குவதா? இபிஎஸ் காட்டம்..!
டாஸ்மாக் தொடர்பான பரிவர்த்தனை ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஐசிஐசிஐ மேலாளர் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்கி மேலாளர் வழங்கிய பரிவர்த்தனை ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி ஊழல் கற்பனை கதை.. ஊழியர்களை துன்புறுத்துகிறது ED..! அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!