தமிழ்நாட்டில் நடப்பது திருட்டு முன்னேற்ற கழக ஆட்சி..! பந்தாடிய இபிஎஸ்..!
அநியாய ஆட்சி நடத்தும் முதலமைச்சர் நியாயமான எல்லை நிர்ணயம் பற்றி பேசுவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தொகுதி மறுவறையரை கூடாது என தொடர்ந்து திமுக அரசு பேசி வரும் நிலையில், தமிழகம் இதுவரை கண்டிராத மிகவும் அநியாயமான, ஊழல் நிறைந்த மற்றும் வம்ச ஆட்சியை வழிநடத்தும் அதே வேளையில், பொம்மை முதல்வர் "நியாயமான எல்லை நிர்ணயம்" பற்றிப் பேசுவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதலில், டாஸ்மாக் கொள்ளை, போதைப்பொருள் மாஃபியா, சட்டவிரோத மதுபானம், ரவுடித்தனம், ஊழல் உள்ளிட்டவற்றை வரையறுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டின் கண்ணியம், காவிரி உரிமைகள் மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்காக அச்சமின்றிப் போராடிய உயர்ந்த தலைவர்களான பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் அழியாத கொள்கைகளில் அதிமுக உறுதியாக நிற்பதாக கூறியுள்ள அவர், எங்கள் பிரதிநிதித்துவம் குறைக்கப்படவோ அல்லது எங்கள் குரல் அடக்கப்படவோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார். 2027 ஆம் ஆண்டில், அல்லது எல்லை நிர்ணயம் எப்போது வந்தாலும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டின் உரிமையான குரலையும் எதிர்காலத்தையும் கடுமையாகப் பாதுகாக்கும் என்று கூறினார்.
இதையும் படிங்க: #mutemode மாடல் அரசு... தீக்குளித்த விவசாயியை காப்பாற்ற இபிஎஸ் வலியுறுத்தல்..!
கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை என்றும் தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான Goal Post மாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை என்றும் தெரிவித்தார்.
உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் #Delimitation குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தின் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப் படுகிறார்கள் என்றும் மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுக்களையும், உருட்டுக்களால் அல்லாமல், களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு நிலையா? உடனே மாநில பாடத்திட்டத்தை மாற்றுங்கள்.. அன்புமணி வலியுறுத்தல்!