ஸ்போர்ட்ஸ் சிட்டி இப்ப தேவையா.? CM விஜய் எதற்கும் பதில் கொடுக்கல.!! இபிஎஸ் குற்றச்சாட்டு..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றிக்கழக செயலிழந்த அரசாக உள்ளது என்று தெரிவித்தார். தனிப்பட்ட பிரச்சனையை பற்றி பேசி சட்டமன்ற நேரத்தை வீணடித்து விட்டதாகவும், சர்க்காரியா கமிஷன் பற்றி பேசிப் பேசி களைத்துப் போய்விட்டார்கள் என்றும் விமர்சித்தார். துறை சார்ந்த கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பது இல்லை என்றும் FQL தொடர்பாக முதலமைச்சர் விஜய் எந்த பதிலையும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
தான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறினார். சட்டமன்றத்தில் தினம்தோறும் எதாவது ஒரு பிரச்சனை நடப்பதால் மக்கள் பிரச்சனைகளை பேச முடியவில்லை என்றும் 10 மணிநேரம் சட்டமன்றம் நடந்தால் 3 மணி நேரம் தான் மக்கள் பிரச்சனை குறித்து பேசப்படுகிறது.
10 மணி நேரத்தில் 7 மணி நேரம் தவெக - திமுக இடையிலான சண்டைகள்தான் நடக்கிறது எனவும் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு 3 அமைச்சர்கள் தான் பதிலளிக்கிறார்கள் என்றார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் களமிறங்கிய அதிமுக..! யாருக்கு சீட்..! விருப்ப மனுக்கள் வழங்கலாம் என அறிவிப்பு..!!
ஸ்போர்ட்ஸ் சிட்டி இப்பொழுது நாட்டிற்கு தேவையா? பொருளாதாரத்தை உயர்த்திவிட்டு அதை செயல்படுத்துங்கள் என்றும் எந்த கதையும் கிடைக்கவில்லை என்று 45 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கதையை பேசுகிறார்கள் எனவும் முதலமைச்சர் விஜய்க்கு புதிய அறை எதற்கு? அண்ணா காலத்திலிருந்து நாங்கள் அனைவருமே அதே அறையில்தான் இருந்தோம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!