×
 

நீங்க செஞ்சீங்களா? இபிஎஸ் vs செங்கோட்டையன்..! பரபரப்பான பேரவை..!!

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே பரபரப்பான வாதம் நடந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடர் அமர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. புதிய அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கை, பொது விவாதங்கள், இரங்கல் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் நடைபெற்று வந்தன. இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது முதல்வரின் முன்னெடுப்பில் ஒரு முக்கிய தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்தத் தீர்மானம் இந்தக் கூட்டத் தொடரில் முதல் வரிசையில் வைக்கப்பட்ட தனித் தீர்மானமாக அமைந்தது. முதல்வர் இதை நேரடியாக முன்மொழிந்தார்.

விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உரம் உள்ளிட்ட விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல் தான் தற்போது ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளீர்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஊக்கத்தொகை உயர்த்தியதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் எல்லாம் கிடைக்காது என்றும் விளக்கம் கொடுத்தார்.

இதையும் படிங்க: CM விஜய்க்கு கூட்டணி கட்சிகளை நெருக்கடி..! உபரி நீர் தான் வருது... பேரவையில் EPS உரை..!!

உரம் விலை உயர்ந்துள்ளது என்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவிட்டது எனவும் அதனால் ஊக்க தொகையால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அப்போது அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மானியத்தை உயர்த்தினோம் என்றும் நீங்கள் உயர்த்தினீர்களா இல்லையா என்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். நெல் குவிண்டாலுக்கு 289 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது தொடர்பாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே காரசார வாதம் நடந்தது. 

இதையும் படிங்க: கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share