×
 

ம.செ.கூட்டத்தில் வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி... ஆடிப்போன மாஜி அமைச்சர்கள்...!

தேர்தல் பணிகளுக்காக அந்த பூத் கமிட்டியை தீவிரப்படுத்தக்கூடிய வகையில், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து, அதற்கான பட்டியலை மாவட்டவாரியாக வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றூம் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான மாதங்களே இருக்கக்கூடிய ஒரு சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கவிட்டுள்ளன. அதிமுகவை பொறுத்தமட்டில் பார்த்தோம் என்றால், தேர்தல் பணியாக பிரதானமாக பார்க்கப்படுவது பூத் கமிட்டியை ஸ்ட்ராங் செய்வது தான். ஏற்கனவே கட்சியினுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை பொறுத்தமட்டில், தேர்தல் பணிகளுக்காக அந்த பூத் கமிட்டியை தீவிரப்படுத்தக்கூடிய வகையில், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து, அதற்கான பட்டியலை மாவட்டவாரியாக வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

குறிப்பாக மே 15-ஆம் தேதியே பூத் கமிட்டி அடங்கிய பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் இந்த பூத் கமிட்டி அமைக்கக்கூடிய பணிகள் என்பது நிறைவு பெறாத ஒரு சூழல்ல தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடான ஆலோசனை கூட்டத்தை கடந்த மே மாதத்தில நடத்தி இருந்தார். அந்த கூட்டத்திலேயே ஏற்கனவே இந்த பூத் கமிட்டி பொறுப்பு மற்றும் நிர்வாகிகளை நியமித்து உடனடியாக பட்டியலை தலைமைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: பரபரக்கும் போதைப் பொருள் வழக்கு! நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் விசாரணை..!

 குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில 68,000த்தக்கும் மேற்பட்ட வாக்குசாவடிகள் இருந்த சூழலில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒன்பது பூத் கமிட்டி நிர்வாகிகள் என்ற அடிப்படையில 6 லட்சத்துக்கும் அதிகமான பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும், பூத் கமிட்டி ஏஜெண்ட்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், அடுத்த முறை கூட்டத்திற்கு வரும் போது ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களும், பூத் கமிட்டியில் இடம் பெறும் 9 பேரையும் ஒரே பிரேமில் போட்டோ எடுக்க வேண்டும்; எந்த மாவட்டம்? எந்த சட்டமன்ற தொகுதி? எந்த பூத் என்ற விவரமும் அதில் இருக்க வேண்டும்; ஒவ்வொரு பூத் கமிட்டி மெம்பரிடமும் அட்டை அல்லது சிலேடு ஒன்றை கொடுத்து அவர்களது விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்குமாறு போட்டோ எடுக்க வேண்டும்; இதை எல்லாம் தொகுத்து ஆல்பம் மாதிரி ரெடி செய்து கொண்டு வர வேண்டும் என கறாராக உத்தரவு போட்டியிருந்தார். 

நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் சில பூத் கமிட்டி உறுப்பினர்களின் வயது 46,47 என இருப்பதை சுட்டிக்காட்டிய எடப்பாடி, நான் 45 வயதுக்குள் இருப்பவர்களைத் தானே நியமிக்கச் சொன்னேன் என முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு மாஜி அமைச்சர் ஆல்பத்தை முழுவதுமாக முடிக்காமல் வந்திருக்கிறார். அவரை பெயரைக் குறிப்பிட்டு உங்க ஆல்பத்துல நிறைய தகவல்கள் மிஸ் ஆகுது எனச் சொல்லியிருக்கார். அதற்கு அந்த முன்னாள் அமைச்சரோ 10 சதவீதம் மட்டும் தான் முடிக்கவில்லை என ஸ்கூல் பிள்ளை சாக்கு சொல்ல, அதற்கு எடப்பாடி பழனிசாமியோ இது உங்களுக்கு 10 சதவீதமா? எனக்கேட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். 

இப்படி ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் கொடுத்த பூத் கமிட்டி டேட்டாக்களை தம்மிடம் ஏற்கனவே உள்ள டேட்டாக்களுடன் ஒப்பிட்டு ஒவ்வொரு மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதைப் பார்த்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவரும் ஆடிப்போய்விட்டார்களாம். 
 

இதையும் படிங்க: #BREAKNG: எல்லாருமே RELEASE... சிவி சண்முகம் கொலை முயற்சி வழக்கில் திண்டிவனம் கோர்ட் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share