×
 

நாளைக்கு முட்டை வாங்கப்போறீங்களா?... கடைக்கு முன்னாடி போய் டென்ஷன் ஆகிடாதீங்க...!

முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலை   ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலை   ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 25 காசுகள் உயர்ந்துள்ளது . 

முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.25 ல் இருந்து 25 காசுகள் உயர்த்தி ரூ.4.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (28-3-2025) அறிவித்துள்ளது.

இந்த விலை நாளை (29-3-2025) காலை முதல் அமலுக்கு வருகிறது. கடந்த 2 நாட்களில் முட்டை விலை 35 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இனி முட்டையைத் தொட்டுக்கூட பார்க்க முடியாதா?... இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வு...! 

முட்டை யின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது இதுவே விலை உயர்வு க்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

  தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தினசரி 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக  அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இனி முட்டையைத் தொட்டுக்கூட பார்க்க முடியாதா?... இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வு...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share